எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்.இராமச்சந்திரன்
பிறப்பு1 ஜனவரி,1953
சென்னை,தமிழ் நாடு

எஸ். இராமச்சந்திரன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றாய்வாளரும் கல்வெட்டறிஞரும் ஆவார். தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவர்.[1] இவர் சென்னையில் பிறந்தவர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் பள்ளியிலும். மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வி பயின்றவர். நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் தமிழ் இளங்கலை பட்டப்படிப்பும் , சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டப்படிப்பும் பயின்றவர். பிறகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் , தொல்லியல்-கல்வெட்டியல் பட்டயப்படிப்பு பயின்று அத்துறையிலேயே 27 ஆண்டுகள் பணியாற்றியவர்.2005ஆம் ஆண்டில் அப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வரலாற்றாய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆவுடையார் கோவிலை கட்டியது யார்?". web.archive.org. 2018-12-13. Archived from the original on 2018-12-13. பார்க்கப்பட்ட நாள் 2022-08-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]