எராப்ரகடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எர்ராப்ரகடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எராப்பிரகடா

எராப்பிரகடா எராண்ணா (Errapragada Erranna, தெலுங்கு: ఎఱ్రాప్రగడ என்பவர் ஒரு தெலுங்குக் கவிஞர் ஆவார். இவர் புரோலயா வேமா ரெட்டியின் (1325–1353) பேரரசில் அரசவைக் கவிஞராக இருந்தவர். இவர் "பிரபந்த பரமேசுவரா" என்று புகழப்பட்டவர்.[1]

சமசுகிருத மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தவர்களில் இவரும் ஒருவர்.[2] தெலுங்கில் முக்கவிகளில் இவரும் ஒருவர். மற்றவர்கள் நன்னய்யா, திக்கனா ஆகியோர் ஆவர். அரி வம்சம், இராமாயணம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார். நரசிம்ம புராணம் என்ற சொந்த நூலையும் எழுதினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vaishanava yugamu" (PDF). Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  2. Errapragada (1926) (in Telugu). Harivamsamu. Madras: Vavilla Ramaswamy Sastrulu and Sons. https://archive.org/details/in.ernet.dli.2015.333032/mode/2up. பார்த்த நாள்: 16 June 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எராப்ரகடா&oldid=3882456" இலிருந்து மீள்விக்கப்பட்டது