எம். வி. சிதம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். வி. சிதம்பரம் (M V CHIDAMBARAM) என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு பயணிகள் கப்பல் ஆகும். 1966 இல் கட்டப்பட்ட இக்கப்பல் 174 மீட்டர் நீளமும், 24 மீட்டர் அகலமும் கொண்டது. 7020 தொன் எடை கொண்ட கப்பலானது. பயணிகளையும் பொருட்களையும் ஏற்றியபிறகு 17,226 தொன் எடையுள்ளதாக இருக்கும். [1]

இக்கப்பலானது 1985 பெப்ரவரியில் சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. கப்பலில் 700 பயணிகளும், 150 பணியாளர்களும் இருந்தனர். சென்னையில் இருந்து 180 மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் வகுப்பு பயணிகள் அறையில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ 12 மணிநேரத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.[2] என்றாலும் தீயாலும், மூச்சுத் திணறியும், நெரிசலில் சிக்கியும் 18 பேர் இறந்தனர், 16 பேர் வரையில் காணாமல் போயினர், என்று அப்போது தகவல்கள் வெளியாயின.[3] இறுதியில் மொத்தம் 28 பேர் இறந்தார்கள் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஆராய்ந்த தடய அறிவியல் நிபுணன் முனைவர் பி. சந்திரசேகரன் இந்த தீவிபத்தானது முதலில் உணவுக் கூடத்தில் ஏற்பட்டுள்ளது. அது புகைப் போக்கி அருகே பதுக்கி வைக்கபட்டிருந்த நைலான் துணிகளில் பற்றி, பின்னர் புகைப்போக்கி குழாய் வழியே இரண்டாம் வகுப்பு பயணிகள் அறைக்கு பரவி உயிரிழப்பை ஏற்படுத்தியது என கண்டறிந்தார்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. BalticShipping.com. "BalticShipping.com". www.balticshipping.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  2. "A sticken passenger liner, charred and perhaps badly damaged..." UPI (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  3. Reuters (1985-02-15). "18 Dead on Indian Ship". The New York Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-22. {{cite web}}: |last= has generic name (help)
  4. கிரிமினல்கள் ஜாக்கிரதை -13, கட்டுரைத் தொடர், தடய அறிவியல் நிபுணர் டாக்டர் பி. சந்திரசேகரன், கல்கி, 29. அக்டோபர், 2000
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வி._சிதம்பரம்&oldid=3277273" இலிருந்து மீள்விக்கப்பட்டது