எம். யோகநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாரிமுத்து யோகநாதன்
பிறப்பு1969 (அகவை 54–55)
இருப்பிடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பணியகம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர் பேருந்து நடத்துனர்
அரசியல் இயக்கம்மரம் நடுதல்
வலைத்தளம்
http://www.yogutrees.com

மாரிமுத்து யோகநாதன் (M. Yoganathan) (1969 ஆம் ஆண்டு பிறந்தவர்) இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் பிரபலமாக உள்ள மரம் நடும் மனிதர் ஆவார். அவர் கடந்த 25 ஆண்டுகளில் 1 லட்சம் மரங்களை நட்டுள்ளார். அவர் கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நடத்துனராகப் பணியாற்றி வருகிறார்.

வாழ்க்கை[தொகு]

அவர் இளம் வயதிலேயே கோத்தகிரி வனப்பகுதிகளில் உள்ள மரங்களின் கீழ் அமர்ந்து கவிதைகள் எழுதும் பழக்கம் கொண்டவர். மரங்களை வெட்டுவதற்கு எதிராக, சட்ட விரோதமாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த கும்பலுடன் அவர் சண்டையிட்டார். கோயம்புத்தூரில் உள்ள மருதமலை-காந்திபுரம் சாலையில் இயங்கும் எஸ் -26 பேருந்தில் தமிழக அரசின் பேருந்து நடத்துனராகப் பணியாற்றி வருகிறார். பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மரங்களை வெட்டுவதனால் வரும் ஆபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் [1]. அவர் மரங்கள் அறக்கட்டளையில் (Tree Trust) உறுப்பினராக உள்ளார்[2]. அவர் மரக்கன்றுகளை வாங்குவதற்கும் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதற்கும் தனது மாத சம்பளத்தில் 40% பயன்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மலையேற்றம் மூலமாக மட்டும் அவர் 1,20,000 மரங்களை நட்டுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் சேவை வீரர் விருது அவருக்கு வழங்கப்பட்டது [3].
  • CNN-IBN இன் உண்மையான கதாநாயகன் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._யோகநாதன்&oldid=2693480" இலிருந்து மீள்விக்கப்பட்டது