எம். டி. தியாகராஜ பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். டி. தியாகராஜ பிள்ளை (M. D. Thyagaraja Pillai) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். தியாகராஜ பிள்ளை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியினைச் சார்ந்தவர். இவர் 1952 மற்றும் 1957 தேர்தல்களில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்ற இருவரில் மற்றவர் எம். சி. முத்துகுமாரசாமி ஆவார்.[1][2] இவர் 1962 தேர்தலில் இதே தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._டி._தியாகராஜ_பிள்ளை&oldid=3388553" இலிருந்து மீள்விக்கப்பட்டது