என். பி. முகமது
என். பி. முகமது (N.. P. Mohammed) (பிறப்பு: ஜூலை 1, 1928 - இறப்பு: ஜனவரி 3, 2003), என்.பி என்ற தனது தலைப்பெழுத்தின் மூலம் அறியப்படும் இவர் ஒரு இந்திய புதின ஆசிரியரும், சிறுகதை எழுத்தாளாரும் மற்றும் மலையாள மொழியில்திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். அவரது சமகாலத்தவர்களான எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.வி. விஜயன், கக்கநாதன், கமலா தாஸ் ஆகியோருடன் சேர்ந்தது மலையாள புனைகதைகளில் நவீனத்துவ இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக அறியப்பட்டார். கேரள சாகித்ய அகாடமியின் தலைவராக இருந்துள்ளார். மேலும் இவர் கேந்திரா சாகித்ய அகாதமி விருது, கதைக்கான கேரள சாகித்ய அகாதமி விருது, நாவலுக்கான கேரள சாகித்ய அகாதமி விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, பத்மபிரப இலக்கிய விருது மற்றும் முத்தத்து வர்கி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் ஆவார்.
சுயசரிதை
[தொகு]என்.பி. முகம்மது , 1928 ஜூலை 1 அன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூண்டுங்கலில், சுதந்திர போராட்ட வீரரான என்.பி. அபு மற்றும் இம்பிச்சி பாத்தும்மா பீவி ஆகியோருக்கு பிறந்தார்.[1] பிரபல அரசியல்வாதியும் கேரள சட்டமன்ற உறுப்பினருமான என்.பி. மொய்தீன் அவரது சகோதரர் ஆவார்.[2] முகம்மது கூண்டுங்கல் உள்ளூர் பள்ளியிலும், பரப்பங்காடி, பாசெல் மிஷன் பள்ளியிலும், கணபதி பள்ளியிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், கோழிக்கோடு சமோரியன் குருவாயூரப்பன் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.[3] அவர் ஒரு கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், கோழிக்கோடு வீட்டுவசதி வாரிய கூட்டுறவு சங்கத்திற்கு பணி மாறினார். அங்கு அடுத்த முப்பதாண்டுகளாக பணிபுரிந்து அதன் செயலாளராக ப்ணியிலிருந்து ஓய்வு பெற்றார். கேரளாகௌமுதி என்ற மலையாள நாளேட்டின் ஆசிரியராகப் பணியாற்றினார். நவசகிதி, நிரீக்சனம், கோபுரம், பிரதீபம் மற்றும் ஜாக்ரதா போன்ற பல வெளியீடுகளுடன் தொடர்புடையவர் ஆவார்.
1952 இல் முகம்மது இம்பிச்சி பாத்தும்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஏழு குழந்தைகள் இருந்தனர்.[3] எழுத்தாளரும் கல்வியாளருமான என்.பி. அபீஸ் முகமது இவரது மகனாவார்.[4] முகமது நிமோனியாவால் பாதிக்கப்பட்டு 2003 ஜனவரி 3 அன்று கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தனது 74 வயதில் இறந்தார்.[1] அவரது உடலானது எம்டி வாசுதேவன் நாயர், யு. ஏ. காதர், பி வல்சலா, கே.டி. முகமது, சுகுமார் அழீக்கோடு, எம். எம். பஷீர், பி.வி. கங்காதரன் இங்கிலாந்து குமரன் உட்பட அவரது நண்பர்கள் முன்னிலையில் கண்ணம்பரம்பு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆளுமை
[தொகு]1950களில் மலையாள புனைகதைகளில் நவீனத்துவ இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்த எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.வி.விஜயன், கக்கநாதன், கமலா தாஸ் போன்ற எழுத்தாளர்கள் குழுவில் முகம்மது இருந்ததாக அறியப்படுகிறது.[5] இது எட்டு புதினங்கள், பத்து சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் பல புத்தகங்களை உள்ளடக்கியது.[6] அவர் தனது புதினமான அரபி பொன்னு (அரபு தங்கம்) என்பதை எம்.டி.வாசுதேவன் நாயருடன் இணைந்து எழுதினார்; இரண்டு எழுத்தாளர்களும் கோழிக்கோடு கருவரக்குண்டு கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக இரண்டு வார காலத்திற்கு ஒன்றாக தங்கியிருந்து இதை எழுதினர். சக்தி மற்றும் அரசியலின் கதையைச் சொல்லும் இரண்யகசிபு என்ற புதினம் இந்து புராணங்களிலிருந்து வரும் கதாபாத்திரங்களை கேரளாவில் நவீன அரசியல் அமைப்பிற்குள் கொண்டுவருகிறது. இவரது கடைசி படைப்பான முகம்மது அப்துர் ரகுமான் என்ற புதினம் புகழ்பெற்ற இந்திய சுதந்திர ஆர்வலர் முகமது அப்துர் ரகுமான் சாகிப்பின் வாழ்க்கை குறித்த கற்பனையான சுயசரிதை அவரது மரணத்திற்குப் பிறகு கையெழுத்துப் பிரதியாகக் கண்டறியப்பட்டு மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது.[4] அவரது மூன்று கதைகள் மராம், மான்யாமகாசனங்களே மற்றும் வீரபுத்ரன் [7] ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.[8]
முகம்மது கேரள சாகித்ய அகாதமியின் தலைவராக 2001 முதல் 2003 வரை தான் இறக்கும் வரை பணியாற்றினார்.[9] அதற்கு முன்னர், அகாதமியின் ஆட்சி மன்ற குழுவில் உறுப்பினராக இருந்த அவர், கேரள சங்க நாடக அகாதமி, கேந்திரா சாகித்ய அகாதமி மற்றும் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக இருந்தார் .[3] அவர் இஸ்லாம் மற்றும் நவீன காலச் சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். மேலும் அலிஜா இசெட்பெகோவிக் எழுதிய கிழக்கு மற்றும் மேற்கு இடையே இஸ்லாம் என்பதின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.[1]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]முகமது தொப்பியம் சட்டவும் தனது முதல் என்ற புதினத்திற்காக 1953 ஆம் ஆண்டில் மலபார் தமிழ்நாட்டிலிருந்து பிரிந்த பின்னர் வழங்கப்பட்ட முதல் பெரிய விருதைப் பெற்றார். தமிழ்நாடு அரசிடமிருந்து ஒரு பெரிய விருதைப் பெற்றார்.[1] கேரள சாகித்ய அகாதமி 1970 ஆம் ஆண்டில் கதைக்கான வருடாந்திர விருதுக்காக இவரது சிறுகதைத் தொகுப்பான பிரசிடென்ட் டே அடையாதே மரணம் என்பதைத் தேர்வு செய்தது.[10] பத்தாண்டுகளுக்குப் பிறகு, அகாதமி மீண்டும் 1981 ஆம் ஆண்டு புதினத்திற்கான கேரள சாகித்ய அகாதமி விருதினை என்னப்பாடம் என்ற புதினத்திற்காக கௌரவித்தது.[11] அவர் சமஸ்த கேரள சாகித்ய பரிசத் விருதைப் பெற்ற அதே ஆண்டில், தெய்வதின்தே கண்ணு [12][13] என்ற படைப்பிற்காக 1993 ஆம் ஆண்டில் கேந்திரா சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். 1997 ஆம் ஆண்டில், லலிதாம்பிகா அந்தர்சனம் ஸ்மாரக சாகித்யா விருதுக்கு [14] பின்னர் 2000 ஆம் ஆண்டில் பத்மபிரப இலக்கிய விருது [15] மற்றும் 2001 இல் முத்தத்து வர்கி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பத்மநாப சுவாமி புரஸ்காரம் [3] மற்றும் சி.வி.ராமன் பிள்ளை விருது ஆகியவற்றை அவரது புனைகதை அல்லாத படைப்பான வீர ராசம் சி.வி.கிரிதிகலிலு'க்காகவும் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Writer N. P. Mohammed,74, dies". Arab News (in ஆங்கிலம்). 2003-01-04. Retrieved 2019-04-28.
- ↑ Reporter, Staff (2015-09-12). "Former MLA N.P. Moideen is dead". The Hindu (in Indian English). Retrieved 2019-04-28.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-04-28. Retrieved 2019-04-28.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 "The Hindu : Book Review - Language Books : Fictional biography". www.thehindu.com. Retrieved 2019-04-28.
- ↑ Modern Indian Literature, an Anthology: Surveys and poems. 1994. ISBN 978-81-7201-324-0.
- ↑ "List of works". Kerala Sahitya Akademi. 2019-04-28. Archived from the original on 2019-04-28. Retrieved 2019-04-28.
- ↑ "List of Malayalam Movies written by NP Muhammed". www.malayalachalachithram.com. Retrieved 2019-04-28.
- ↑ "Profile of Malayalam Story Writer NP Muhammed". malayalasangeetham.info. Retrieved 2019-04-28.
- ↑ "Pall of gloom at Sahitya Akademi". 4 January 2003 இம் மூலத்தில் இருந்து 2012-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120928053554/http://www.hindu.com/2003/01/04/stories/2003010402560300.htm.
- ↑ "Kerala Sahitya Akademi Award for Story". Kerala Sahitya Akademi. 2019-04-29. Archived from the original on 2017-07-05. Retrieved 2019-04-29.
- ↑ "Kerala Sahitya Akademi Award for Novel". Kerala Sahitya Akademi. 2019-04-29. Archived from the original on 2013-11-09. Retrieved 2019-04-29.
- ↑ "Literary Awards". web.archive.org. 2007-05-24. Archived from the original on 2007-05-24. Retrieved 2019-04-29.
- ↑ Awards & Fellowships-Akademi Awards பரணிடப்பட்டது 2009-08-28 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Lalithambika Antharjanam Smaraka Sahitya Award". www.keralaculture.org (in ஆங்கிலம்). 2019-04-29. Retrieved 2019-04-29.
- ↑ "Padmaprabha Literary Award - Padma Prabha Puraskaram". www.keralaculture.org (in ஆங்கிலம்). 2019-04-29. Retrieved 2019-04-29.
மேலும் படிக்க
[தொகு]- "Meet the Author - N. P. Mohammed" (PDF). Sahitya Akademi. June 16, 2001. Retrieved 2019-04-29.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Portrait commissioned by Kerala Sahitya Akademi". Kerala Sahitya Akademi. 2019-04-23. Archived from the original on 2016-05-06. Retrieved 2019-04-23.
- "Handwriting". Kerala Sahitya Akademi. 2019-04-23. Archived from the original on 2019-04-28. Retrieved 2019-04-23.