என். ஜி. பார்த்திபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். ஜி. பார்த்திபன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்சி. கோபால் முதலியார்

என். ஜி. பார்த்திபன் (N. G. Parthiban) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பதினைந்தாம் தமிழக சட்டப்பேரவைக்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இவரைச் சபாநாயகர் ப. தனபால் தகுதி நீக்கம் செய்தார்.[2][3] இவரது தந்தை சி.கோபால் முதலியார் சோளிங்கர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் செங்குந்தர் கைக்கோலா முதலியார் (எச்சான் கோத்திரம்) சமூகத்தினைச் சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "General Election to Legislative Assembly Trends and Results 2016: Tamil Nadu : Constituency-wise Trends". Election Commission of India. 19 May 2016. Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 27 May 2018.
  2. Verdict on disqualification of 18 MLAs on June 14; Tamil Nadu on tenterhooks
  3. Echo of poll debacle: AMMK sees many jumping ship
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஜி._பார்த்திபன்&oldid=3122109" இலிருந்து மீள்விக்கப்பட்டது