எண்பெருங்குன்றம்
எண்பெருங்குன்றம் என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், மதுரையை ஒட்டியுள்ள யானைமலை, நாகமலை, அழகர்மலை, பரங்குன்றம், அரிட்டாபட்டி மலை, கீழக்குயில்குடி, கீழவளவு, குரண்டி மலை, சமணர் மலை ஆகிய எட்டு மலைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். இந்த எட்டு மலைகளையும் குழுவாக இந்த பெயரில் அழைக்கக் காரணம் இந்த எட்டு மலைகளிலும் உள்ள சமணப் படுகைகள், கல்வெட்டுகள், சமணச் சிற்பங்கள் போன்றவை ஆகும்.[1][2]
குறிப்புகள்[தொகு]
- ↑ வர்த்தினி, பர்வத. "மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 10". https://www.vikatan.com/. 2021-08-23 அன்று பார்க்கப்பட்டது. External link in
|website=
(உதவி) - ↑ எம். சரவணகுமார், வரலாறு சொல்லும் எண்பெருங்குன்றன்!, கட்டுரை, தி இந்து சித்திரை மலர், 2016