எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்னா செயின்ட். வின்சென்ட் மில்லே
எட்னா செயின்ட். வின்சென்ட் மில்லே வான் வேச்டேன் என்பவரால் 1933 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
எட்னா செயின்ட். வின்சென்ட் மில்லே
வான் வேச்டேன் என்பவரால் 1933 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
பிறப்புபெப்ரவரி 22, 1892(1892-02-22)
ராக்லேன்ட்,மெய்ன்
இறப்புஅக்டோபர் 19, 1950(1950-10-19) (அகவை 58)
ஆஸ்டர்லிட்ஸ்,நியூயார்க்
புனைபெயர்நான்சி பாய்ட்
தொழில்கவிஞர்
தேசியம்அமெரிக்கா

எட்னா செயின்ட். வின்சென்ட் மில்லே (Edna St. Vincent Millay) (பிப்ரவரி 22, 1892 - அக்டோபர் 19, 1950) ஒரு அமெரிக்க பெண் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியராவார். 1923 ல் அவர் எழுதிய ஒரு கவிதைக்காக புலிட்சர் பரிசு பெற்றார். அவ்விருதை வென்ற மூன்றாவது பெண் அவராவார். மேலும் பெண்ணிய இயக்கத்தில் அவரின் பங்களிப்புகள் மற்றும் அவரது பல காதல் விவகாரங்களுக்காக அவர் பிரபலமாக அறியப்படுகிறார். அவர் 'நான்சி பாய்ட்' என்ற புனைபெயரில் கவிதை எழுதினார். ரிச்சர்டு வெல்பர் என்ற பிரபல கவிஞர் "நூற்றாண்டின் சிறந்த கவிதைகளுள் சிலவற்றை எழுதியவர்“ என்று இவரைக் குறிப்பிட்டுள்ளார்.