எட்டுப்பட்டி ராசா (திரைப்படம்)
எட்டுப்பட்டி ராசா | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கஸ்தூரி ராஜா |
தயாரிப்பு | வி. நடராஜன் |
கதை | கஸ்தூரி ராஜா |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கிச்சஸ் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | பிரமிட் பிலிம்ஸ் இன்ரநஷனல் |
வெளியீடு | 14 பிப்ரவரி 1997 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எட்டுப்பட்டி ராசா (etttupattu rasa) 1997-இல் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். நெப்போலியன், குஷ்பு, ஊர்வசி ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி. நடராஜன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் பிப்ரவரி 14, 1997-இல் வெளியிடப்பட்டுள்ளது.[1]
கதைச்சுருக்கம்
[தொகு]சிங்கராசு (நெப்போலியன்) ஒரு புத்திசாலியான கருணை குணம் கொண்ட மனிதன். இவர் எட்டு ஊரைப் பாதுகாப்பதுடன் கால்வாய் ஒன்றிற்கருகில் வசித்து வந்தார். பழனியம்மா (ஊர்வசி) சிங்கராசை ஒருமுகமாக காதலித்து வர ஆனால் சிங்கராசோ பாண்டியம்மாவையே (குஷ்பு) விரும்பினார். பாண்டியம்மா இரக்க குணத்தோடும் உணச்சிவசப்படுகிற பெண்ணாகவும் இருந்தார். சிங்கராசு இறுதியில் பாண்டியம்மாவைத் திருமணம் செய்தார்.
மாரிமுத்துவின் (மணிவண்ணன்) சகோதரனும் (சுகன்ராஜ்) பொன்ராசுவின் மகளும் (அபிதா) ஒருவரை ஒருவர் காதலித்தாலும் அவர்களின் காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பைக் காட்டினர். எனவே சிங்கராசு அவ்விரு ஜோடிகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததோடு அவர்களைச் சேர்த்து வைப்பதாக வாக்கும் கொடுத்தார். ஆனால் பிறகு அவ்விரு காதல் ஜோடியும் தற்கொலை செய்து கொள்ள பொன்ராசுவும் மாரிமுத்துவும் சிங்கராசுவைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்தனர். சிங்கராசு தனது வேலைகளிலே பெரும்பாலும் ஈடுபட்டமையினால் பாண்டியம்மா தனித்துப் போனாள். ஒரு நாள் மாரிமுத்து சிங்கராசுவைப் பற்றி பாண்டியம்மாவிடம் ஒரு பொய் கூறினான். இதனால் பாண்டியம்மா தற்கொலை செய்து கொண்டாள். ஆனால் ஊர்மக்களோ சின்ராசுதான் பாண்டியம்மாவைக் கொன்றான் என கூறத்தொடங்கினர். பழனியம்மா சிங்கராசுவுடன் வந்து தங்கினாள். சிங்கராசுவும் பழனியம்மாவைத் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தான். பின்னர் ஒரு நாள் பாண்டியம்மாவின் மரணித்திற்குக் காரணம் பொன்ராசு மற்றும் மாரிமுத்து ஆகியோர்தான் என்பது தெரியவர பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.
நடிகர்கள்
[தொகு]- துரைசாமி நெப்போலியன் - சிங்கராசு
- குஷ்பு சுந்தர் - பாண்டியம்மா
- ஊர்வசி - பழனியம்மா
- பொன்வண்ணன் - பொன்ராசு
- மணிவண்ணன் - மாரிமுத்து
- வினு சக்ரவர்த்தி - பாண்டியம்மா, பழனியம்மா ஆகியோரின் தந்தை
- சார்லி - மொக்கையன்
- அபிதா - பொன்ராசுவின் மகள்
- சுகன்ராஜ் - மாரிமுத்துவின் தம்பி
- குமரிமுத்து
- செம்புலி ஜெகன்
- கே. இராஜேஷ்குமார்
- மண்ணாங்கட்டி சுப்பிரமணியம்
- ரூபா ஸ்ரீ - விருந்தினர் தோற்றம்
- விசித்ரா - விருந்தினர் தோற்றம்
- இராம் இலட்சுமணன் - கடைசிக் காட்சிகளில்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கான வரிகளை கஸ்தூரி ராஜா எழுதியுள்ளார்.[2][3][4]"பஞ்சுமிட்டாய்" பாடல் மிகவும் பிரபலமானது.
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"பீமாசேன மகராச மரத்தேப்பு" | தேவா | 0:34 |
"எட்டுப்பட்டி ராசா" | துரைசாமி நெப்போலியன், சுவர்ணலதா | 3:31 |
"காரிக்காள பூட்டிக்கிட்டு" | மணிவண்ணன், கல்பனா | 2:26 |
"காத்து அடிக்குது" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 5:06 |
"லவா பழம்" | மணிவண்ணன் | 2:38 |
"மேற்கு சீமையிலே" | தேவா, சுவர்ணலதா | 5:21 |
"பஞ்சு மிட்டாய் சீலகட்டி" | மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி | 4:56 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Filmography of ettupatti raasaa". cinesouth.com. Archived from the original on 2006-10-29. Retrieved 2012-05-19.
- ↑ "Ettu Patti Rasa By Deva". muzigle.com. Retrieved 2012-05-19.
- ↑ "Ettu Patti Raasa - Deva". thiraipaadal.com. Retrieved 2012-05-19.
- ↑ "Ettupatti Raasa : Tamil Movie". hummaa.com. Retrieved 2012-05-19.