எட்டியாந்தோட்டை
எட்டியாந்தோட்டை (Yatiyanthota, சிங்களம்: යටියන්තොට இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது அவிசாவளை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் கரவனல்லைக்கும் கித்துள்கலைக்கும் இடையே அமைந்துள்ளது. இது, களனி கங்கையின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை[தொகு]
எட்டியாந்தோட்டை நகரில் 2012 கணக்கெடுப்பின் படி 2,948 பேர் வசிக்கின்றனர், இவர்களில் 1548 பேர் பெண்களும், 1400 பேர் ஆண்களும் ஆவர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "எட்டியாந்தோட்டை புள்ளிவிபரங்கள்". எட்டியாந்தோட்டை பிரதேச சபை. http://www.yatiyantota.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=45&Itemid=57&lang=en. பார்த்த நாள்: 20 பெப்ரவரி 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ![]() | |
மாநகரசபைகள் | இரத்தினபுரி | |
நகரசபைகள் | பலாங்கொடை | கேகாலை | |
சிறு நகரங்கள் | அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை |