எச். வசந்தகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசந்தகுமார்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
18 சூன் 2019 – 28 ஆகத்து 2020
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் பொன். இராதாகிருஷ்ணன்
தொகுதி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்-நாங்குநேரி
பதவியில்
25 மே 2016 – 29 மே 2019
முதலமைச்சர்
முன்னவர் ஏ. நாராயணன்
பின்வந்தவர் ரெட்டியார்பட்டி வி. நாராயணன்
பதவியில்
17 மே 2006 – 14 மே 2011
முதலமைச்சர் மு. கருணாநிதி
முன்னவர் எஸ். மாணிக்க ராஜ்
பின்வந்தவர் ஏ. நாராயணன்
தனிநபர் தகவல்
பிறப்பு ஹரிகிருஷ்ணன் வசந்தகுமார்
(1950-04-14)14 ஏப்ரல் 1950
அகத்தீஸ்வரம், திருவாங்கூர்-கொச்சி, இந்திய ஒன்றியம்
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு 28 ஆகத்து 2020(2020-08-28) (அகவை 70)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
கொரோனாத் தொற்று
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெப்ரீன் ஜெ
பிள்ளைகள் விஜய் வசந்த்,
வினோத்குமார்,
தங்கமலர்
பெற்றோர் ஹரிகிருஷ்ணன் நாடார்
தங்கம்மை

எச். வசந்தகுமார் (H. Vasanthakumar, 14 ஏப்ரல் 1950 - 28 ஆகத்து 2020) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் வீட்டு உபயோகப் பொருள் அங்காடியான வசந்த் அன் கோவின் நிறுவனத் தலைவராகவும், செயற்கைக்கோள் தொலைக்காட்சியான வசந்த் தொலைக்காட்சியின் நிறுவனத் தலைவராகவும் இருந்தார்.[1] இவர் பதினேழாவது மக்களவை உறுப்பினராகவும், தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

இளமைக் காலம்[தொகு]

வசந்த் அன்ட் கோ, புரசைவாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீசுவரம் என்னும் ஊரில் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் ஹரிகிருஷ்ணன் நாடார், தங்கம்மை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கத்தில் வீ. ஜி. பி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். மிகச் சிறிய முதல் பணத்தைக் கொண்டு ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.[2] இந்நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளன. வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

வசந்தகுமார் தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முகாமையான தலைவர்களில் ஒருவராகவும், நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில், இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

இறப்பு[தொகு]

கொரோனா பரிசோதனை செய்தபோது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இருவரும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஆகத்து 10 ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பிறகு வசந்தகுமார் உடல்நிலை சீராக இருந்த நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆகத்து 27, 2020 அன்று வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் ஆகத்து 28, 2020 அன்று மாலை சுமார் 7 மணி அளவில் வசந்தகுமார் மரணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._வசந்தகுமார்&oldid=3462285" இருந்து மீள்விக்கப்பட்டது