உவமப்போலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் உவமம், உவமப்போலி என்பனவற்றைச் சுட்டுகிறது. உவமையை நான்கு வகை என்கிறது. [1] உவமப் போலியை ஐந்து வகை என்கிறது. [2] [3] இவற்றை இளம்பூரணர் என்னும் உரையாசிரியரின் வழி நிரல் செய்து விளங்கிக்கொள்ளலாம். உவமப்போலி ஐந்துக்கு [[இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை நிரலுக்குப் பின் காணலாம்.

நிரல்[தொகு]

உவமம் உவமப்போலி
வினை, [4]
பயன், [5]
மெய், [6]
உரு [7]
வினை,
பயன்,
உறுப்பு,
உரு,
பிறப்பு [8]

இளம்பூரணர் எடுத்துக்காட்டு[தொகு]

1
இதற்கு உவமை இல்லை எனல்

நின்னோர் அன்னர் பிறர் இவர் இன்மையின்
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும [9]

2
இதற்கு இது மட்டுமே உவமை எனல்

மன் உயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அணையை நின் புகழோடு பொலிந்தே

3
பல பொருள்களில் உள்ள உறுப்புகளைத் தெரிந்தெடுது ஒன்றாகச் சேர்த்தால் இதற்கு உவமை ஆகும் - எனல்

நல்லார்கள் நல்ல உறுப்பாயின தாங்கள் தாங்கள்
எல்லாம் உடன் ஆனது என்று அன்ன இயைந்த ஈட்டால்
சொல்லால் முகம் கண் முலை தோள் இடை அல்குல் கை கால்
பல் வாய் குழல் என்று இவற்றால் படிச் சந்தம் ஆனாள்

4
பல இடங்களிலும் உளதாகிய கவின் ஓரிடத்து வரின் இதற்கு உவமை ஆம் - எனல்

நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை [10]

5
கூடாப் பொருளொடு உவமித்து வருவன

வாதாது அமைவானோ வாதாது அமைவானோ
வாதாது அமைகுவன் அல்லன் மலைநாடன்
ஈரத்தில் இன்னவை தோன்றின் நிழல் கயத்து
நீருள் குவளை வெந்து அற்று [11]

அடிக்குறிப்பு[தொகு]

  1. வினை, பயன், மெய், உரு, என்ற நான்கே
    வகை பெற வந்த உவமத் தோற்றம். (தொல்காப்பியம் 3-272)
  2. உவமப் போலி ஐந்து' என மொழிப (தொல்காப்பியமு 3-295)
  3. தவல் அருஞ் சிறப்பின் அத் தன்மை நாடின்,
    வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
    பிறப்பினும் வரூஉம் திறத்த' என்ப . (தொல்காப்பியம் 3-296)
  4. புலி போலப் பாய்ந்தான்
  5. மழை போல் வழங்கினான்
  6. பவளம் போன்ற வாய்
  7. துடி போலும் இடை
  8. நினக்குவமையில்லை என்னும்வழிச் செயலானாதல். பயனானாதல். உறுப்பானாதல், உருவானாதல், பிறப்பானாதல் ஒப்பாரில்லையெனல் வேண்டும் என்பது கருத்து. பிறவு மன்ன - இளம்பூரணர் விளக்கம்
  9. புறநானூறு 373
  10. பதிற்றுப்பத்து 14
  11. கலித்தொகை 41
"https://ta.wikipedia.org/w/index.php?title=உவமப்போலி&oldid=3445567" இலிருந்து மீள்விக்கப்பட்டது