உலண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலண்டாகச் சுற்றிய நூல்

உலண்டு என்பது நூல் போன்றவற்றை அங்குமிங்குமாக உருட்டிச் சுற்றும் முறை. சுற்றானது பிரியாமல் இருக்க இவ்வாறு சுற்றப்படும்.

தமிழ் இலக்கியங்களில் இச்சொல் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏறு தழுவிய ஆயனை ஏறு தன் கொம்பில் குத்தித் தூக்கிச் சுற்றுவது உலண்டு போல் இருந்ததாம் என கலித்தொகை கூறுகிறது.[1]

சிலந்திக்கூடு (சிலந்திவலை) அதன் பின்னல் கருதி உலண்டு என வழங்கப்படுகிறது என சிறுபஞ்சமூலம் கூறுகிறது.[2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மேற்பாட்டு உலண்டின் நிறம் ஒக்கும் பன்குருக்கண்
    நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக்
    கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றம் காண் – கலித்தொகை 101
  2. வான் குருவியின் கூடு, வால் உலண்டு கோல் தருதல்,
    தேன் புரிந்து யாக்கும் செயல் ஆகா – சிறுபஞ்சமூலம் 27
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலண்டு&oldid=1905118" இலிருந்து மீள்விக்கப்பட்டது