உள்ளடக்கத்துக்குச் செல்

உலக பொம்மலாட்ட நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.[1][2][3]

தென்னிந்தியாவில் மரபுவழியாக வளர்ச்சியடைந்த இக்கலை பின்னர் இலங்கை, ஜாவா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பொம்மலாட்டக்கலையில் சீன, மலேசிய, ஜப்பானிய நாடுகளின் பாதிப்புகளும் இருபதாம் நூற்றாண்டு காலத்தில் ஜெர்மனி, இத்தாலி, செக்கோஸ்லாவாக்கியா போன்ற நாடுகளின் பாதிப்புகளும் காணப்பட்டிருப்பினும் கூட பாரம்பரிய பொம்மலாட்டக் கலை தென் இந்திய குறிகளுடனே இன்னும் நடைபெற்று வருவதை அவதானிக்கலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BE, Admin (2021-03-21). "World Puppetry Day: 8 celebrity puppets that made many Belgians happy". Brussels Express (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2022-10-03.
  2. BE, Admin (2021-03-21). "World Puppetry Day: 8 celebrity puppets that made many Belgians happy". Brussels Express (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2022-10-03.
  3. "World Puppetry Day 2022: Theme, Importance and Activities". Merazone.com (in ஆங்கிலம்). Retrieved 2022-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_பொம்மலாட்ட_நாள்&oldid=3769145" இலிருந்து மீள்விக்கப்பட்டது