உலக இளையோர் நாள் 2000

ஆள்கூறுகள்: 41°51′09″N 12°38′10″E / 41.85250°N 12.63611°E / 41.85250; 12.63611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
XV உலக இளையோர் நாள் 2000
நாள்ஆகத்து 15–ஆகத்து 20, 2000
அமைவிடம்உரோமை நகரம், இத்தாலி
கருப்பொருள்"வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்" (யோவா 1:14)

உலக இளையோர் நாள் 2000 என்பது கத்தோலிக்க திருச்சபையில் 2000-ஆம் ஆண்டில், உரோமை நகரம், இத்தாலியில் நிகழ்ந்த இளையோருக்கான உலக இளையோர் நாள் நிகழ்வாகும். இது ஆகத்து 15 முதல் 20 வரை நிகழ்ந்தது.

இந்த நிகழ்வு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், கிறிஸ்து பிறப்பின் 2000-ஆவது ஆண்டினையொட்டி அறிவித்த யூபிலி ஆண்டோடு இணைந்திருக்க செய்யப்பட்டது. இதுவே இந்த உலக இளையோர் நாளின் கருப்பொருளாகவும் அமைந்தது.

உலக இளையோர் நாளின் போது புனித பேதுரு பேராலய சதுக்கத்தில் இறுதி முடிவுத் திருப்பலி நிகழாதது இதுவே முதன் முறையாகும்.


மேலும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_இளையோர்_நாள்_2000&oldid=3590875" இலிருந்து மீள்விக்கப்பட்டது