உலகநாயகி பழனி
தோற்றம்
உலகநாயகி பழனி | |
|---|---|
| தேசியம் | இந்தியன் |
| கல்வி | தமிழில் முனைவர் பட்டம் |
| பணி | பேராசிரியர் |
| அறியப்படுவது | பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் |
| விருதுகள் | அம்மா இலக்கிய விருது |
உலகநாயகி பழனி என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும் பேச்சாளருமாவார்.
தமிழ்ப்பணி
[தொகு]இவர் தமிழ்த்துறைத் தலைவராக ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 2018 ஆம் ஆண்டிற்கான அம்மா இலக்கிய விருது பெற்றுள்ளார்.[1] தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நூலகக் குழு உறுப்பினராகவும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொதுச்செயலராகவும் உள்ளார்.[2][3]
எழுதிய நூல்கள்
[தொகு]- வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்
- பாரதி 100
- எட்டையபுரத்து எரிமலை
- குலோத்துங்கன் கவிதைப் பரிமாணங்கள்
- கலைஞரின் படைப்புலகில் பெண்ணியம்
- வாழ்வியல் வள்ளுவம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அம்மா இலக்கிய விருது பெற்றோர்". தமிழ் வளர்ச்சித் துறை. Retrieved 16 April 2025.
- ↑ "நிர்வாகக் குழு". தமிழ் வளர்ச்சிக் கழகம். Retrieved 16 April 2025.
- ↑ "நூலகக் குழு உறுப்பினர்". த.இ.க. Retrieved 16 April 2025.