உலகக் காட்டுயிர் நாள்
உலகக் காட்டுயிர் நாள் | |
---|---|
பிற பெயர்(கள்) | வனவிலங்கு நாள் / WWD |
கடைபிடிப்போர் | அனைத்து ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் |
கொண்டாட்டங்கள் | கொண்டாடவும், மற்றும் உலகின் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வு பெறவும். |
நாள் | மார்ச் 3 |
நிகழ்வு | ஒவ்வொரு ஆண்டும் |
உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1]
இம்முயற்சியில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு திரைப்பட விழா, விழிப்புணர்வு கருதரங்கங்களை ஐ. நா நடத்திவருகிறது.
கருப்பொருள்[தொகு]
- 2018: "பெரும் பூனைகள்: அச்சுறுத்தலில் இரைக்கொல்லிகள்"[2]
- 2017: "இளம் குரல்களைக் கேளுங்கள்".[3]
- 2016: "காட்டுயிர்களின் எதிர்காலம் எங்கள் கைகளில்"
- 2015: "காட்டுயிர் குற்றம் பற்றி தீவிரம் பெற இதுவே நேரம்".
இவற்றையும் காண்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
- ↑ "100 days until UN World Wildlife Day 2018".
- ↑ "Engaging and empowering the youth is the call of next year's UN World Wildlife Day".