உர்பத்து பீல்
| உர்பத்து பீல் Urpad Beel | |
|---|---|
கோல்பாராவில் உர்பத்து ஏரியின் அழகிய காட்சி | |
| அமைவிடம் | அகியா கிராமம், கோல்பாரா மாவட்டம், அசாம், இந்தியா |
| ஆள்கூறுகள் | 26°05′26.2″N 90°35′19.9″E / 26.090611°N 90.588861°E |
உர்பத்து பீல் (Urpad Beel) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்தில் இருக்கும் அகியா கிராமத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். இயற்கை ஏரியான இது கோல்பரா மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமான கோல்பராவிலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. உர்பத்து பீல் கீழ் அசாமின் மிகப்பெரிய இயற்கை ஏரிகளில் ஒன்றாகும்.[1]
நீர்வாழ் உயிரினங்கள்
[தொகு]உர்பத்து ஏரி பல வகையான மீன்கள் மற்றும் பறவைகளுக்கு இயற்கையான வாழ்விடமாகும். பெருநாரை, சிறிய சீழ்க்கைச்சிரவி மற்றும் மீன்கொத்திகள் போன்ற பறவைகளின் முக்கியமான வாழ்விடமாகும். இங்கு நீர் அல்லி மற்றும் பொதுவான நீர் பதுமராகம் போன்ற நீர்வாழ் தாவரங்களும் உள்ளன.[1]
பாதுகாப்பு
[தொகு]2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று அசாம் மண் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா, உர்பத் ஏரியை அழகுபடுத்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Assam Govt sanctions Rs. 1 crore for Protection of Historic Urpad Beel in Goalpara". Guwahati Plus (in ஆங்கிலம்). Retrieved 17 November 2020.
- ↑ "Schemes launched to beautify Urpad Beel in Goalpara district". The Sentinel (in ஆங்கிலம்). Retrieved 17 November 2020.