உயிலட்டி அருவி
உயிலட்டி அருவி (Uylatti Waterfall's) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து கூக்கல்துறை செல்லும் சாலையில் இடது புறத்தில் அமைந்துள்ளது. கூக்கல் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட உயிலட்டி கிராமத்திற்கு அருகிலும் கூக்கல்துறையின் கிழக்குப் பகுதியில் 1 கி.மீ . தொலைவிலும் இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[1] கூக்கல்துறை நீர்வீழ்ச்சி என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பாறை இடுக்குகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைவது இதன் சிறப்பாகும்.[2] இந்த அருவியிலிருந்து தண்ணீர் ஓடை வழியாக உயிலட்டி மற்றும் கூக்கல்தொரை கிராமங்களுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "கோத்தகிரியில் ஆர்ப்பரிக்கும் உயிலட்டி நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி". www.dinakaran.com. Archived from the original on 2021-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-10-30.
- ↑ "Tamil Newspaper, Tamilnadu News, World news, Latest Tamil News, Tamilnadu Politics, Tamil News". DailyThanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-30.