உமாமகேசுவர மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவ வடிவங்களில் ஒன்றான
உமையோடிருந்தான் திருக்கோலம்

மூர்த்த வகை: 25 மகேசுவர மூர்த்தம்,
64 மகேசுவர மூர்த்தம்
துணை: உமாதேவியார்
இடம்: கைலாயம்

உமாமகேசன், என்பது அறுபத்து நான்கு மற்றும் இருபத்துநான்கு சிவத்திருமேனிகளில் ஒன்றாகும். முதற்பெரும் தம்பதியரான உமையும் சிவனும் அருகருகே அமர்ந்தருளும் திருக்கோலமே உமாமகேசத் திருக்கோலம் ஆகும்.[1]

உருவவியல்[தொகு]

மகேசன், சுகாசனத்தில் அமர்ந்து,வெண்ணீறு பூசிய மேனியும், மான் மழு, அஞ்சேல், அபயம் தாங்கிய நான்கு கரங்களும் கொண்டு, அ்ருகே குவளை மலரேந்திய கரத்தினளாகக் காட்சிதரும் உமையவளை அணைத்தபடி அருட்காட்சி அளிப்பான்.[2] சில வடிவங்களில், ஈசனின் திருமடியில் அம்மை அமர்ந்திருப்பாள். கயிலையில் அம்மையும் அப்பனும் அளிக்கும் அருட்காட்சியே இந்தக்கோலம் எனப்படுவதுண்டு.[3]

கோயில்கள்[தொகு]

கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில் மூலவர், இம்மூர்த்தியின் திருப்பெயரையே தாங்கிநிற்கிறார். மேலும் மீனாட்சியம்மன் கோவில் முதலான பல பழமை வாய்ந்த கோயில்களில், இம்மூர்த்தியின் திருவுருவம் அமைக்கப்பட்டு விளங்குகின்றது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. David Weldon, John Bigelow Taylor, Jane Anne Casey, Naman Parmeshwar Ahuja, (2003), Divine presence: arts of India and the Himalayas, Casa Asia, ISBN 978-81-208-1748-7{{citation}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  2. உமாமகேச மூர்த்தி தியானத் துதி
  3. உமாமகேச மூர்த்தி, தினமலர் கட்டுரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாமகேசுவர_மூர்த்தி&oldid=2984121" இலிருந்து மீள்விக்கப்பட்டது