உமறுப் புலவர் விருது
உமறுப் புலவர் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். இவ்விருது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருநாள் தொடங்கி ஒவ்வோராண்டும் வழங்கப்படும்.
பெயர்க் காரணம்[தொகு]
உமறுப் புலவர் சீறாப் புராணம் என்னும் இசுலாமியக் காப்பியத்தை இயற்றியவர். எனவே அவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும்வகையில் உமறுப் புலவரின் பெயரால் விருது உருவாக்கப்பட்டு இருக்கிறது.[1]
யாருக்கு?[தொகு]
தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.[1]
எவ்வளவு? எவை?[தொகு]
உமறுப் புலவர் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.[1]
எப்பொழுது?[தொகு]
உமறுப்புலவர் விருது ஒவ்வோராண்டும் ஏப்ரல் திங்களில் நடைபெறும் சித்திரைத் திருநாளில் வழங்கப்படுகிறது.[1]