உமறுப் புலவர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமறுப் புலவர் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். இவ்விருது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருநாள் தொடங்கி ஒவ்வோராண்டும் வழங்கப்படும்.

பெயர்க் காரணம்[தொகு]

உமறுப் புலவர் சீறாப் புராணம் என்னும் இசுலாமியக் காப்பியத்தை இயற்றியவர். எனவே அவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும்வகையில் உமறுப் புலவரின் பெயரால் விருது உருவாக்கப்பட்டு இருக்கிறது.[1]

யாருக்கு?[தொகு]

தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.[1]

எவ்வளவு? எவை?[தொகு]

உமறுப் புலவர் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.[1]

எப்பொழுது?[தொகு]

உமறுப்புலவர் விருது ஒவ்வோராண்டும் ஏப்ரல் திங்களில் நடைபெறும் சித்திரைத் திருநாளில் வழங்கப்படுகிறது.[1]

சான்றடைவு[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.5.2013 ஆம் நாள் சமர்பித்த அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமறுப்_புலவர்_விருது&oldid=1663464" இலிருந்து மீள்விக்கப்பட்டது