உதய சூரியன் (1959 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதய சூரியன் சிங்கப்பூரிலிருந்து 1959ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். உதய சூரியன் எனும் பெயரில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இடைக்கிடையே சில இதழ்கள் வெளிவந்துள்ளன.

ஆசிரியர்[தொகு]

  • தக்கலை சேக் சுலைமான்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் கதை, கவிதை, கட்டுரைகள் சிங்கப்பூர் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கான விளக்கக் கட்டுரைகளையும், சிங்கப்பூர் சமூகப் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும் இது கொண்டிருந்தது. அத்துடன், கேள்வி பதில், வாசகர் பகுதி போன்றனவும் இடம்பெற்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய_சூரியன்_(1959_சிற்றிதழ்)&oldid=764723" இலிருந்து மீள்விக்கப்பட்டது