உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்சாய் சின் பகுதியில் அமைந்த உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு

உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அல்லது மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control -LAC), இந்தியா மற்றும் சீனாவுக்கும் இடையே அமைந்த செயலூக்கும் கொண்ட எல்லைக்கோடாகும். 4057 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கட்டுப்பாட்டுக் கோடு இந்தியாவின் ஐந்து மாநிலங்களைக் கடக்கிறது. அவை: மேற்கில் லடாக், நடுவில் உத்தரகாண்ட் மற்றும் இமாசலப் பிரதேசம், கிழக்கில் சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகும்.[1] இந்திய சீனப் போருக்குப் பின்னர், இருநாடுகளின் எல்லையாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு விளங்குகிறது.

அக்டோபர் 2013-இல் இந்திய-சீன நாடுகள், எல்லையில் பதற்றம் ஏற்படாமல் இருக்க, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகில் இரு நாட்டு இராணுவப்படைகளும் ரோந்து சுற்றி வர உடன்படிக்கை செய்து கொண்டன.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]