உசிலம்பட்டி தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 9°58′16″N 77°47′35″E / 9.97118°N 77.79293°E / 9.97118; 77.79293
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசிலம்பட்டி
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மாநில நெடுஞ்சாலை 154, உசிலம்பட்டி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்9°58′16″N 77°47′35″E / 9.97118°N 77.79293°E / 9.97118; 77.79293
ஏற்றம்216 மீட்டர்கள் (709 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்மதுரை - போடிநாயக்கனூர் கிளை வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுUSLP
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் மதுரை
வரலாறு
திறக்கப்பட்டதுநவம்பர் 20, 1928 (1928-11-20)
மூடப்பட்டது1942 – 1954
2011 – 2020
மறுநிர்மாணம்சனவரி 23, 2020 (2020-01-23)
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
உசிலம்பட்டி is located in தமிழ் நாடு
உசிலம்பட்டி
உசிலம்பட்டி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
உசிலம்பட்டி is located in இந்தியா
உசிலம்பட்டி
உசிலம்பட்டி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

உசிலம்பட்டி தொடருந்து நிலையம் (Usilampatti railway station, நிலையக் குறியீடு:USLP) இந்தியாவின் தமிழ்நாட்டின், மதுரை மாவட்டத்திலுள்ள, உசிலம்பட்டி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளது.[1]

இருப்பிடம்[தொகு]

உசிலம்பட்டி தொடருந்து நிலையம், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி நகரத்திற்கு சேவை செய்கிறது. இது இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்குகிறது.

வரலாறு[தொகு]

உசிலம்பட்டி தொடருந்து நிலையம் 1928 நவம்பர் 20இல் நிறுவப்பட்டது. 90 கி.மீ தொலைவில் உள்ள மதுரை - போடிநாயக்கனூர் மீட்டர் கேஜ் பாதையை, மதராசு மாகாண வருவாய் உறுப்பினர் நார்மன் மார்ஜோரிபங்க்ஸ் திறந்து வைக்கும் போது, இந்த தொடருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.[2] பின்னர் 1942 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் போது, பாதை மூடப்பட்டு தடங்கள் அகற்றப்பட்டன. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1953–1954க்கு இடையில், பாதை மீட்டெடுக்கப்பட்டது.[3]

பின்னர் சனவரி 1, 2011 அன்று மூடப்பட்டது, 2012க்குள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நிதிபற்றாக்குறை காரணமாக, திட்டம் மிக மெதுவான வேகத்தில் நடைபெற்றது. இறுதியாக, 2020 சனவரி 23 அன்று, இரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் சோதனை ஓட்டத்திற்கு பின்னர், மதுரை சந்திப்புக்கும் - உசிலம்பட்டிக்கும் இடையில் (37 கி.மீ) முதல் பாதை திறக்கப்பட்டது.[4]

சேவைகள்[தொகு]

சனவரி 2020 நிலவரப்படி, தொடருந்து சேவைகள் இல்லை.[5] மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறுகையில், தொடருந்து சேவையானது 2020 பிப்ரவரி இறுதிக்குள் உசிலம்பட்டிக்கும், ஏப்ரல் மாதத்திற்குள் போடிநாயக்கனூர் வரையிலும், பாதை மாற்றும் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "USLP/Usilampatti". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2020-01-24.
  2. "மதுரை -போடி ரயில் போக்குவரத்து இன்றுடன் நிறுத்தம்" [Madurai-Bodi rail transport to stop today]. தினமலர் (in Tamil). Madurai. 2010-12-31. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. S. Vijay Kumar (2008-03-14). "Metre gauge to become history". தி இந்து (in Tamil). Madurai. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Commissioner of Railway Safety, Southern Circle inspecting the newly laid Madurai - Usilampatti Broad Gauge section today - 23.01.2020 @RailMinIndia @GMSRailway". Twitter. Madurai. 2020-01-23. பார்க்கப்பட்ட நாள் 2020-01-24.
  5. "Departures from USLP/Usilampatti". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2020-01-24.
  6. "மதுரை - உசிலம்பட்டி ரயில் சேவை தொடங்குவது எப்போது?: சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு கோட்ட மேலாளர் பதில்" [Madurai-Usilampatti rail service to start?: Divisional Manager answers to MP S. Venkatesan question]. The Hindu (Tamil) (in Tamil). Madurai. 2020-01-21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-24.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Speed trials held on converted railway line to Usilampatti". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Madurai. 2020-01-24. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.

வெளி இணைப்புகள்[தொகு]