ஈரப்பதம்
Jump to navigation
Jump to search

மழைக்காடுகளிலும் உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.
வளியில் உள்ள நீராவியின் அளவே ஈரப்பதம் அல்லது ஈரப்பதன் எனப்படும். இக்காரணி ஒரு பிரதேசத்தின் வானிலையையும் காலநிலையையும் தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். சார்பற்ற ஈர்ப்பதம் என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். சார்பு ஈரப்பதம் என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். குறிப்பு ஈரப்பதம் என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.
அளவிடும் முறை[தொகு]
காற்றின் ஈரப்பதத்தை அளவிட ஈரமானி பயன்படுத்தப்படும். புவியின் பல்வேறு பிரதேசங்களின் ஈரப்பதத்தை அளப்பதற்குச் செய்ம்மதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.