இவளுக்கு இன்னொரு முகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவளுக்கு இன்னொரு முகம்
நூல் பெயர்:இவளுக்கு இன்னொரு முகம்
ஆசிரியர்(கள்):சேலம் ஆறுமுகன்
வகை:கதை
துறை:புதினம்
இடம்:பத்மினி பதிப்பகம்,
144, வி.எம்.ஆர்.நகர்,
மெய்யனூர்,
சேலம் -636 004.
மொழி:தமிழ்
பக்கங்கள்:136
பதிப்பகர்:பத்மினி பதிப்பகம்
பதிப்பு:நவம்பர்2008
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

இந்த “இவளுக்கு இன்னொரு முகம்” எனும் கதை நூல் 136 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 50 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

நூலாசிரியர் சேலம் ஆறுமுகன் சிறந்த படைப்பாளர். இவரது மூன்று படைப்புகள் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவியர்களால் ஆய்வு செய்யப்பட்டு "ஆய்வியல் நிறைஞர்" (எம்.ஃபில்) பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழ்நாடு அரசின் "கலை முதுமணி" பட்டம் , ஈரோடு தமிழ்ச்சங்கம் வழங்கிய "தனித்தமிழ் பாவலர்" பட்டம் ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார். இவருடைய "பறவைக்குச் சிறகேது" எனும் நூல் நாகப்பன் இராஜம்மாள் இலக்கிய விருதும் பெற்றிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அணிந்துரை[தொகு]

இந்நூலுக்கு இனமானக் கவிஞர் அரிமா அவர்கள் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

பொருளடக்கம்[தொகு]

வயதான காலத்தில் பெரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் அடையும் துயரம் கொடுமையானது. அந்தக் கொடுமையில் இருக்கும் பெரிய பண்ணாடியான வேலப்ப பண்ணையார் எப்படி தன்னை விடுவித்துக் கொள்கிறார் என்பதைச் சொல்கிறது இந்தக்கதை.

வெளி இணைப்புகள்[தொகு]