இலோகரா வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலோகரா வம்சம்
1003 பொ.ச.–1320 பொ.ச.
1000 களின் முற்பகுதியில் இலோகரா வம்சத்தின் இருப்பிடமும் அதன் அண்டைப் பகுதிகளும். இந்து ஷாகிகளும் கூர்ஜர-பிரதிகார்களும் கசனவித்துகளின் படையெடுப்பிற்கு ஆளாகினர். அதே நேரத்தில் இலோகரா வம்சம் இன்னும் மூன்று நூற்றாண்டுகளுக்கு முஸ்லிம் ஆட்சியை எதிர்க்க வேண்டியிருந்தது.[1]
தலைநகரம்சிறிநகர்
பேசப்படும் மொழிகள்சமசுகிருதம்
சமயம்
இந்து சமயம்
பௌத்தம்
அரசாங்கம்முடியாட்சி
முடியாசி 
• 1003 – 1028 பொ.ச.
இராஜதரங்கிணியில் கூறப்பட்டுள்ளபடி சங்கிரமராஜா
• 1301 – 1320 பொ.ச.
சுகதேவன்
வரலாற்று சகாப்தம்நடுக்காலம்
• தொடக்கம்
1003 பொ.ச.
• முடிவு
1320 பொ.ச.
முந்தையது
பின்னையது
[[உத்பால வம்சம்]]
ஷா மிர் வம்சம்
தற்போதைய பகுதிகள்ஆப்கானித்தான்
இந்தியா
பாக்கித்தான்

இலோகரா வம்சம் (Lohara dynasty) கச பழங்குடியினத்தைச் சேர்ந்த காஷ்மீரின் இந்து ஆட்சியாளர்களாக இருந்த ஓர் வம்சமாகும்.[2] [3] இந்திய துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதியில், பொ.ச.1003-லிருந்து தோராயமாக பொ.ச.1320 வரையில் ஆண்ட வம்சத்தின் ஆரம்பகால வரலாறு பற்றி 12 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கல்கணரால் எழுதப்பட்ட இராஜதரங்கிணியில் விவரிக்கப்பட்டுள்ளது. இது வம்சத்தின் இறுதி வரையிலும் அதற்கு அப்பாலும் தகவல்களை வழங்குகின்றது. வம்சத்தின் பிற்கால ஆட்சியாளர்கள் பலவீனமாக இருந்தனர். இந்த காலகட்டத்தில் உள்நாட்டு சண்டையும் ஊழலும் பரவியிருந்தது. அவர்களுக்கு குறுகிய ஆண்டுகள் மட்டுமே அவகாசம் இருந்தது. இப்பகுதியில் இஸ்லாமிய தாக்குதல்களின் வளர்ச்சியால் வம்சம் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தது. [4]

தோற்றம்[தொகு]

சர் மார்க் ஆரல் இசுடெய்ன் மொழிபெயர்த்த 12-ஆம் நூற்றாண்டின் வரலாறான இராஜதரங்கிணியின் உரையின்படி, இலோகராவின் தலைவர்களின் குடும்பம் கசர் பழங்குடியினராக இருந்தது.[5] [6] வம்சத்தின் இருப்பிடம் இலோகராகோட்டை என்று அழைக்கப்படும் ஒரு மலைக்கோட்டை ஆகும். அதன் துல்லியமான இடம் நீண்ட காலமாக அறிஞர்களின் விவாதத்திற்கு உட்பட்டது. இராஜதரங்கிணியின் மொழிபெயர்ப்பாளரான இசுடெயின், இந்தக் கோட்பாடுகளில் சிலவற்றைப் பற்றி விவாதித்து, மேற்கு பஞ்சாப் மற்றும் காஷ்மீர் இடையே வர்த்தகப் பாதையில் உள்ள பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்திருந்ததாக முடிவு செய்தார். எனவே, அது காஷ்மீரில் அல்ல. இலோகரா இராச்சியம், கூட்டாக இலோக்ரின் என்று அழைக்கப்படும் பெரிய கிராமங்களின் குழுவை மையமாகக் கொண்டிருந்தது. இது அவர்கள் அமைந்துள்ள பள்ளத்தாக்கு மற்றும் அதன் வழியாக ஓடும் நதியால் பகிரப்பட்ட பெயராகும். இலோகரா இராச்சியம் அநேகமாக அண்டை பள்ளத்தாக்குகளுக்கும் பரவியிருக்கலாம். [7]

சிம்மராஜா என்றழைக்கப்படும் இலோகராவின் மன்னனின் மகள் தித்தா, காஷ்மீரின் மன்னரான சேம்குப்தனை மணந்து, இரு பகுதிகளையும் இணைத்தார். அந்தக் காலத்தின் பிற சமூகங்களுடன் ஒப்பிடும்போது, காஷ்மீரில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர்.[8] மேலும் சேமகுப்தன் 958-இல் இறந்த பின்னர் அவரது மனைவி தித்தா தனது மகன் இரண்டாம் அபிமன்யுவிற்கு அரசப் பிரதிநிதியாக அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார். 972-இல் அபிமன்யுவின் மரணத்திற்குப் பிறகு, அவர் தனது பேரன்களான நந்திகுப்தன், திரிபுவனகுப்தன், பீமகுப்தன் ஆகியோருக்கு இதே போன்று ஆட்சி செய்தார். அவள் இந்த பேரக்குழந்தைகள் ஒவ்வொன்றையும் கொன்றாள். அரசப் பிரதிநிதியாக அவள் இராச்சியத்தின் மீது திறம்பட ஒரே அதிகாரத்தைக் கொண்டிருந்தாள். மேலும் 980-இல் பீமகுப்தன் கொல்லப்பட்டதன் மூலம் அவள் தன் சொந்த உரிமையில் ஆட்சியாளரானாள். [9] [10]

தித்தா, பின்னர் காஷ்மீரில் தனது வாரிசாக சம்கிரமராஜா என்ற தனது மருமகனைத் தத்தெடுத்தார். ஆனால் இலோகராவின் ஆட்சியை விக்ரகராஜாவிடம் விட்டுவிட்டார். அவர் மற்றொரு மருமகனாகவோ அல்லது அவள சகோதரர்களில் ஒருவராகவோ இருக்கலாம். இந்த முடிவிலிருந்து காஷ்மீரின் இலோகரா வம்சம் எழுந்தது. விக்ரகராஜா தனது வாழ்நாள் முழுதும் அந்த பகுதிக்கும் இலோகராவிற்கும் தனது உரிமையை நிலைநாட்ட முயன்றார். [9] மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகும் "முடிவற்ற கிளர்ச்சிகளும் பிற உள் நாட்டுப் பிரச்சனைகளும்" தொடர்ந்து வரவிருந்தன. [11]

வம்சம்[தொகு]

சம்கிரமராஜா[தொகு]

இலோகரா வம்சத்தின் நிறுவனராக சம்கிரமராஜா கருதப்படுகிறார்.[12]

காஷ்மீருக்கு எதிரான கசினியின் மகுமூதுவின் பல தாக்குதல்களை முறியடித்தார். மேலும் இவர் முஸ்லிம் தாக்குதல்களுக்கு எதிராக ஆட்சியாளர் திரிலோச்சனபாலர்களை ஆதரித்தார். [12]

பொ.ச.1003 சூன் அல்லது சூலை 1028-க்கு இடைப்பட்ட காலத்தில் சம்கிராமராஜாவின் ஆட்சியானது, அவரது அரசவையில் இருந்தவர்களின் செயல்களால் வகைப்படுத்தப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த பேராசையை திருப்திப்படுனார்கள். மேலும் இதற்கு பிரதம மந்திரி துங்காவின் பாத்திரம் முக்கியமானது. துங்கா ஒரு முன்னாள் கால்நடை மேய்ப்பவர். அவர் தித்தாவின் காதலியாகவும் மாறினார். மேலும், அவரது பிரதம அமைச்சராகவும் இருந்தார். இராச்சியத்தின் மீது அவளது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக தித்தாவுடன் இணைந்து பணியாற்றுவதில் அவள் ள். மேலும் தித்தாவின் மரணத்திற்குப் பிறகு தனது அதிகாரத்தை தொடர்ந்து பயன்படுத்தினார். சம்கிராமராஜா அவளுக்கு பயந்து, பல ஆண்டுகளாக அவளை அவளது வழியில் செல்ல அனுமதித்தார். துங்கா, இராச்சியத்தின் குடிமக்களிடமிருந்து கணிசமான அளவு செல்வத்தைப் பிரித்தெடுக்கும் ஊழல் அதிகாரிகளில் பலரை நியமித்தாள். இந்த நியமனதைப் பெற்றவர்களும், அவர்களின் செயல்களும், துங்காவை பிரபலமடையச் செய்தன. மேலும் அரசவைக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகளின் சவால்களைச் சமாளிக்க முடியாமல் போனதற்கு சம்கிராமராஜாவின் வயதும் காரணமாக இருக்கலாம். சம்கிராமராஜா அமைச்சரை நீக்குவதற்கான சதிகளை அமைதியாக ஆதரித்தார். இறுதியில் துங்கா கொல்லப்பட்டார். இருப்பினும், இது அரசவையிலோ அல்லது நாட்டிலோ விஷயங்களை மேம்படுத்த சிறிதும் செய்யவில்லை. ஏனெனில் அவளது மரணம் அவளால் நியமிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் குறைவான ஊழல்வாதிகள் அல்லாத அரச விருப்பங்களின் வருகையை ஏற்படுத்தியது. [13] [14]

ஹரிராஜா மற்றும் அனந்தன்[தொகு]

சம்கிராமராஜாவின் மகன், ஹரிராஜா, அவருக்குப் பிறகு, 22 நாட்கள் மட்டுமே ஆட்சி செய்தார். ஹரிராஜா கொல்லப்பட்ட பின்னர் மற்றொரு மகனான அனந்தன் பதவியேற்றார். அவரது தாயார் சிறீலகா அதிகாரத்தை வைத்திருக்க விரும்பியதால் ஹரிராஜா கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் இறுதியில் அவரது குழந்தைகளைப் பாதுகாப்பவர்களால் அந்தத் திட்டத்தில் முறியடிக்கப்பட்டது. [13] [15] இந்த நேரத்தில்தான் விக்ரகராஜா மீண்டும் காஷ்மீரைக் கைப்பற்ற முயன்றார். தலைநகர் சிறீநகருக்கு அருகில் ஏற்பட்ட போரில் கொல்லப்பட்டார். [9]

அனந்தனின் ஆட்சிக் காலம் அரச வக்கிரத்தால் வகைப்படுத்தப்பட்டது; அவர் பெரிய கடன்களை குவித்தார். அது அரச கிரீடத்தை அடகு வைக்க வேண்டிய அவசித்தில் முடிந்தது. இருப்பினும் அவரது ராணி சூர்யமதி தலையிட்டபோது நிலைமை மேம்பட்டது. அவர் தனது சொந்த வளங்களைப் பயன்படுத்தி தனது கணவர் பெற்ற கடன்களைத் தீர்க்க முடிந்தது. மேலும் அரசாங்கத்தை நிலைநிறுத்தும் வகையில் திறமையான அமைச்சர்களை நியமிப்பதையும் அவர் மேற்பார்வையிட்டார். [13] 1063 ஆம் ஆண்டில், அவர் தனது மகனான கலசனுக்கு ஆதரவாக அனந்தனை பதவி விலகும்படி கட்டாயப்படுத்தினார். இது அநேகமாக வம்சத்தை காப்பாற்றுவதற்காக இருக்கலாம். ஆனால் கலசனின் திறமையின்மை காரணமாக இந்த உத்தி வெற்றியடையவில்லை. அவரது மகன் பதவி வகித்தாலும், அனந்தன் திறம்பட மன்னராக இருக்க அப்போது ஏற்பாடு செய்யப்பட்டது. [16]

கலசன், உத்கர்சன் மற்றும் ஹர்ஷன்[தொகு]

கருடன் மேல் அமர்ந்திருக்கும் விஷ்ணு மற்றும் லட்சுமியின் சிலை, 11 ஆம் நூற்றாண்டில் இலோகரா வம்சத்தின் போது செதுக்கப்பட்டது. [17] இச்சிற்பம் வைகுண்ட சதுர்மூர்த்தி வகையைச் சேர்ந்தது.

கலசன் பொ.ச.1089 வரை மன்னராக இருந்தார். மற்றொரு பலவீனமான விருப்பமுள்ள நபர், தனது மகளுடன் ஒரு பாலியல் உறவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கலசன் அரசவையில் அவரைச் சுற்றியிருந்தவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டார். மேலும், பிற்காலம் வரை அரசாங்க விஷயங்களில் சிறிது காலம் மட்டுமே செலவிட்டார். இவர் 1076-இல் தனது தந்தையின் திறமையான ஆட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அனந்தன் பல விசுவாசமான பிரபுக்களுடன் தலைநகரை விட்டு வெளியேறினார். பின்னர் விஜயேசுவரத்தில் முற்றுகையிட்டார். பின்னர் அனந்தன் 1081-இல் தற்கொலை செய்து கொண்டார். இதற்குப் பிறகுதான் கலசன் பொறுப்புடன் ஆட்சி செய்யத் தொடங்கினார். அதே போல் ஒரு வெளியுறவுக் கொள்கையையும் ஏற்படுத்தினார். இது வம்சம் சுற்றியுள்ள மலைவாழ் பழங்குடியினர் மீது வைத்திருந்த செல்வாக்கை மேம்படுத்தியது. [13] [18]

References[தொகு]

குறிப்புகள்
  1. Satish Chandra (historian) (2004) (in en). Medieval India: From Sultanat to the Mughals-Delhi Sultanat (1206-1526) - Part One. Har-Anand Publications. பக். 19–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-241-1064-5. https://books.google.com/books?id=L5eFzeyjBTQC&pg=PA19. 
  2. Stein 1900.
  3. Thakur 1990.
  4. Hasan (1959), pp. 29-32.
  5. Stein 1900, ப. 433.
  6. Thakur 1990, ப. 287.
  7. Stein (1900), Vol. 2, pp. 293-294.
  8. Kaw, p. 91.
  9. 9.0 9.1 9.2 Stein (1900), Vol. 2, p. 294.
  10. Stein (1900), Vol. 1, pp. 104-105.
  11. Stein (1900), Vol. 2, p. 370.
  12. 12.0 12.1 India - Early History, Publications Division Ministry of Information & Broadcasting, 2016 p.63
  13. 13.0 13.1 13.2 13.3 Hasan (1959), p. 32.
  14. Stein (1900), Vol. 1, pp. 106-108
  15. Stein (1900), Vol. 1, p. 108.
  16. Stein (1900), Vol. 1, p. 110.
  17. "Metropolitan Museum of Art". www.metmuseum.org.
  18. Stein (1900), Vol. 1, pp. 110-111.
உசாத்துணை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலோகரா_வம்சம்&oldid=3395286" இலிருந்து மீள்விக்கப்பட்டது