உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சுமண குமார் மகாபத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமண குமார் மகாபத்ரா
இலட்சுமண குமார் மகாபத்ரா
பிறப்பு(1929-10-29)29 அக்டோபர் 1929
நீலகிரி, பலசோர் மாவட்டம், ஒடிசா, இந்தியா
இறப்பு1 சூன் 2020(2020-06-01) (அகவை 90)
புவனேசுவர், இந்தியா
பணிமானுடவியலாளர், கல்வியாளர்
கல்விப் பின்னணி
கல்விகல்கத்தா பல்கலைக்கழகம்,
ஹாம்பர்க் பல்கலைக்கழகம்
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்உத்கல் பல்கலைக்கழகம்

இலட்சுமண குமார் மகாபத்ரா (Lakshman Kumar Mahapatra; 29 அக்டோபர் 1929 – 1 சூன் 2020) என்பவர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற மானுடவியலாளரும் கல்வியாளரும் ஆவார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டம் பெற்றார். பின்னர் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1986, 1989ஆம் ஆண்டில் சம்பல்பூர் மற்றும் உத்கல்பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.[1] மானுடவியல் துறையில் ஒடிசாவை உலக அளவில் அறிமுகப்படுத்திய முக்கிய அறிஞர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

மகாபத்ரா 29 அக்டோபர் 1929 அன்று ஒடிசாவின் பலசோர் மாவட்டத்தில் உள்ள நீலகிரியில் பிறந்தார்.[2]

கல்வி

[தொகு]

இவர் பரிபாடாவில் உள்ள மகாராஜா கிருஷ்ண சந்திர உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் ரேவன்ஷா கல்லூரியில் இடைநிலைப் படிப்பையும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை மானுடவியல் பட்டங்களையும் பெற்றார். 1960 ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

பணிக்காலம்

[தொகு]

1964 ஆம் ஆண்டு உத்கல் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.[4] 1967 முதல் 1989 வரை அப்பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதன்முறையாக தென்கிழக்கு ஆசிய ஆய்வை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும் வளர்ச்சி மானுடவியல் மற்றும் மக்கள் தொகை மானுடவியல் போன்ற புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தினார்.[5] 1986 ஆம் ஆண்டு உத்கல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 1989–1990 காலகட்டத்தில் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். 1985–1988 மற்றும் 1995–1996 காலகட்டங்களில் இந்தியாவில் இடம்பெயர்ந்த மக்களின் மறுகுடியேற்றம் தொடர்பாக உலக வங்கியின் ஆலோசகராக பணியாற்றினார்.[6]

விருதுகள்

[தொகு]
  • இந்திய சமூக அறிவியல் துறைக்கான உயரிய பல்கலைக்கழக மானியக் குழு விருதைப் பெற்ற ஒடிசாவின் முதல் அறிஞர் இவராவார்.[5]
  • 2004 ஆம் ஆண்டு இந்திய மானுடவியல் சங்கத்தின் தங்கப் பதக்க விருதைப் பெற்றார்.
  • 2015 ஆம் ஆண்டு இந்திய தேசிய மானுடவியல் அமைப்பால் கௌரவிக்கப்பட்டார்.

நூல்கள்

[தொகு]
  • ஒடிசாவின் நாட்டுப்புற மரபுகள்
  • இந்தியாவில் கடவுள்கள், அரசர்கள் மற்றும் சாதி அமைப்பு - மற்றும் பிற கட்டுரைகள்
  • செயல்பாட்டிற்கான அறிவு: மானிடவியல் குறித்த ஒரு ஆய்வு நூல்
  • ஒடிசாவின் மக்களும் கலாச்சார மரபுகளும்
  • இந்தியாவில் மறு குடியேற்றம், வறுமைக்குள்ளாதல் மற்றும் மறுசீரமைப்பு
  • அறிவியல், கலாச்சாரம் மற்றும் மேம்பாடு
  • அரசு, சமூகம் மற்றும் மதம்
  • சமூக நலனின் பரிமாணங்கள்
  • பழங்குடியினர் மேம்பாட்டு உத்தியை மறுபரிசீலனை செய்தல்
  • இந்தியாவில் பழங்குடியினர் மேம்பாடு: கட்டுக்கதையும் எதார்த்தமும்
  • பழங்குடியினர் மாற்றம் மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பு: இந்தியா மற்றும் ஒடிசா
  • மரணம்

இலட்சுமண குமார் மகாபத்ரா 1 சூன் 2020 அன்று புவனேசுவரில் தனது 90வது வயதில் காலமானார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anthropologist Mahapatra no more". The Pioneer. 3 November 2020. https://www.dailypioneer.com/2020/state-editions/anthropologist-mahapatra-no-more.html.
  2. "Odia anthropologist Prof LK Mahapatra dies at 90". The New Indian Express. 2 June 2020. https://www.newindianexpress.com/states/odisha/2020/jun/02/odia-anthropologist-prof-lk-mahapatra-dies-at-90-2151106.html.
  3. Misra, Kamal K. (2020-09-01). "Lakshman Kumar Mahapatra (1929–2020): Gifted Scholar, Brilliant Teacher". Social Change.
  4. "L.K. Mahapatra put Odisha on the global map of anthropological studies". The Hindu.
  5. 1 2 3 "Renowned Anthropologist Prof L K Mahapatra No More". Odisha Bytes. 1 June 2020.
  6. "Professor Lakshman Kumar Mahapatra (29 October 1929 -- 1 June 2020)" (PDF).