இலங்கையின் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் இலங்கையின் வனவள பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் 501 பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் உள்ளன .[1] வனவள பாதுகாப்பு துறையின் கண்காணிப்பின் கீழ் வரும் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் 1988 ஆம் ஆண்டின் தேசிய மரபுரிமைகள் வனாந்தர பிரதேச சட்டத்தில் வரையறுக்கப்பட்டவை, வன நிலம், மற்றும் பேன்தகுநிலைக்காக வனங்கள் நிர்வாகம் போன்றவையை உள்ளடக்கியிருக்கும்.[2] உலகப் பாரம்பரியக் களம், சிங்கராஜக் காடு, தேசிய பாரம்பரிய வனத்துக்கு ஓர் உதாரணமாகும். நக்கிள்ஸ் மலைத்தொடர் அடங்கலாக 32 வனங்கள் பாதுகாப்பு வனங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன . வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்பு அவசர சட்டத்தினால் அடையாளங் காணப்பட்ட இயற்கை வளங்கள், தேசிய பூங்காக்கள் , காட்டு தாழ்வாரங்கள் மற்றும் சரணாலயங்கள் நிர்வாகிக்கப்படுகின்றன. பாதுகாக்கப்படும் அனைத்து வகை பகுதிகளும் 1,767,000 ஹெக்டயர் ஆகும். பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் இலங்கையின் மொத்தப் பரப்பில் 26.5 சதவீதமாகும்.[1] இது ஏனைய ஆசிய நாடுகள் மற்றும் அநேக உலக நாடுகளைக் காட்டிலும் அதிக சதவீதமுடைய பாதுகாக்கப்படும் பிரதேசங்களாகும்.

உயிரியற் பல்வகைமை[தொகு]

தாவரப் பல்வகைமை மற்றும் அகணிய உயிரி இலங்கையில் மிகவும் அதிகமாகும். 1,052 இனங்களுக்கு சொந்தமான 3,210 பூக்கும் தாவரங்களில் 916 வகைகள் மற்றும் 55 இனங்கள் அகணிய தாவரங்களாகும்.[3] இலங்கையின் 55 dipterocarp (சிங்களம் "ஹோரா ") இல் ஓரினம் உலகின் எந்தப் பகுதியிலும் கிடைக்கப் பெறாது . இலங்கையின் நீர்நில உயிரின பல்வகைமை தற்பொழுதே அறியப்பட்டு வருகின்றது.இலங்கை இயலுமான பல 140 நீர்நில இனங்களுக்கு வாழிடமாக அமையலாம். 50 க்கும் மேல் அறியப்பட்ட நன்னீர் நண்டுகள் இலங்கைக்கு வரையரறுக்கப்பட்டவையாகும் .

காடழிப்பு[தொகு]

1990 இற்கும் 2000 ஆம் ஆண்டுக்குமிடையில் இலங்கை ஒரு வருடத்திற்கு சராசரியாக 26,800 ஹெக்டயர் வனப்பகுதிகளை இழந்தது.[4] இது 1.14 சதவீத வருடாந்த சராசரி காடழிப்பு விகிதமாக கணக்கிடப்பட்டது. 2000 மற்றும் 2005 ஆம் ஆண்டிட்கிடையில் இது வருடத்திட்கு 1.43 சதவீதமாக துரிதமடைந்தது.

பாதுகாப்பு எத்தனங்கள்[தொகு]

வனவிலங்கு பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து நடத்திய செயல்முறை மூலம் 92 முக்கிய உயிரியற் பல்வகைமை பிரதேசங்கள் (KBAs) இணங் காணப்பட்டுள்ளன.[5] இப்பகுப்பில், குறிப்பாக இலங்கையின் பறவையியல் களக் குழுவினால் சேகரிக்கப்பட்ட முக்கிய பறவைப் பிரதேசங்கள் பற்றிய தகவல்கள் போன்ற பல தகவல்கள் மற்றும் வெளியிடப்பட்ட இலக்கியமும் இணைக்கப்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து KBAக்களும் நாட்டின் தென்மேற்கு ஈர வலயத்திலேயே காணப்படுகின்றன. ஏனைய பிரேதேசங்களில் காணப்படாத அகணிய இனங்களை இக்களங்கள் கொண்டுள்ளதுடன் அவற்றில் சில உலகளவில் அச்சுறுத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட இனங்களுக்கு வளர்ப்பிடமாகவும் அமைந்துள்ளதால் இவை ஈடு செய்ய முடியாத பிரதேசங்களாகக் கருதப்படுகின்றன.

இலங்கையின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கடினமாக ஆராயப்பட்டு வருகின்றது. உதாரணமாக 2004 ஆம் ஆண்டிலேயே செரண்டிப் scops ஆந்தை வர்ணிக்கப்பட்டு மேலும் ஒன்பது பறவை இனங்கள் அகணிய உயிரினங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.[5] இதனால், அகணிய உயிரின மொத்த எண்ணிக்கை குறைமதிப்பிடப்பட வாய்ப்புள்ளது.

வன இருப்புக்கள் மற்றும் உத்தேச இருப்புக்கள்[தொகு]

வன வள பாதுகாப்புத் தினக்களத்தினால் பல எண்ணிக்கையான வன இருப்புக்கள் மற்றும் உத்தேச இருப்புக்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேசங்கள் உயிரியற் பல்வகைமை நிறைந்த சுற்றுச் சூழலாகும்.[6]

உயிரியற் பல்வகைமை இருப்புக்கள்[தொகு]

உலகப் பாரம்பரியக் களம், சிங்கராஜக் காடு, இலங்கையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒன்றாகும் 

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) மனித மற்றும் உயிரியற் பல்வகைமைத் திட்டத்தின் கீழ் நான்கு உயிரியற் பல்வகைமை இருப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பூந்தல தேசிய வனம், ஹுருலு காட்டு ஒதுக்கீடு, கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய (KDN) மற்றும் சிங்கராஜக் காடு ஆகியவையாகும்.[7] இவ் சர்வதேச உயிரியற் பல்வகைமை இருப்புக்கள் தவிர தேசிய உயிரியற் பல்வகைமை இருப்புக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் முப்பத்தி மூன்றும் மற்ற நான்கு வனவிலங்கு பாதுகாப்புத் தினக்களத்தினாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.[8]

பாதுகாக்கப்படும் தேசிய பிரதேசங்கள்[தொகு]

பாதுகாக்கப்படும் தேசிய பிரதேசங்கள் ஆறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[9] முதல் நான்கு பாதுகாக்கப்படும் தேசிய பிரதேச வகைகள் அனைத்து வாழ்க்கைச் சூழல் மற்றும் இலங்கையின் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாம் வகைகள் 1993 ஆம் ஆண்டு தாவர மற்றும் விலங்கியல் அவசர சட்டத்தைத் திருத்தியதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். எனினும், இவ்வகைகளின் கீழ் இன்னும் எந்தப் பகுதிகளும் அறிவிக்கப்படவில்லை.

  1. கண்டிப்பான இயற்கை இருப்புக்கள் 
  2. தேசிய பூங்கா
  3. இயற்கை இருப்புக்கள்
  4. காட்டு தாழ்வாரங்கள்
  5. புகலிடம்
  6. கடல் இருப்புக்கள்
  7. இடைப்பட்ட வலயங்கள்
  8. சரணாலயங்கள்

கண்டிப்பான இயற்கை இருப்புக்கள்[தொகு]

SNRகளில் மனித நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதுடன் அவை ஒரு தூய இயற்கை அமைப்பாக பாதுகாக்கப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் மற்றும் நிர்வாகஸ்தரின் முன் ஒப்புதலுடனும் அனுமதிக்கப்படுகின்றனர் [6]

பாதுகாக்கப்பட்ட பிரதேசம் பரப்பளவு ஹெக்டயரில் 
அறிவிக்கப்பட்ட திகதி
ஹக்கல 1,141.6
1938-02-05
யால 28,904.7
1939-03-10
ரிடிகல 1,528.1
1941-11-07

மூலம்:[6]

தேசிய பூங்காக்கள்[தொகு]

பொதுமக்கள் பார்வைக்காகவும் வனவிலங்கியல் பற்றி கற்பதற்காகவும் அனுமதிக்கப்படும் பிரதேசங்களே தேசிய பூங்காக்களாகும். எனினும், வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் நோக்குடனே தேவையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இயற்கை இருப்புக்கள்[தொகு]

வனவிலங்கியல் பார்வையிடல் மற்றும் கற்றல் போன்றன இப்பிரதேசங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கண்டிப்பான இயற்கை இருப்புக்கள் போன்று இங்கும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் ஊக்குவிக்கப்படுகின்றன. இப்பிரதேசங்கள் கண்டிப்பான இயற்கை இருப்புக்களிலிருந்து பாரம்பரிய மனித நடவடிக்கைகளை தொடர அனுமதிப்பதன் மூலம் வித்தியாசப்படுகின்றது.

பாதுகாக்கப்பட்ட பிரதேசம் பரப்பளவு ஹெக்டயரில் பரப்பளவு ஹெக்டயரில்


அறிவிக்கப்பட்ட திகதி
திருகோணமடு 25,019.3
1986-10-24
ஆறு 824.1
1991-07-31
மின்னேரியா-கிரிதல
II தொகுதி 1,923.6
1993-06-25
III தொகுதி 4,745.3
1995-07-07
IV தொகுதி 8,335.5
1997-09-01
வெடஹிரகந்த 3,229
2002-06-07

மூலம்:[6]

காட்டு தாழ்வாரங்கள்[தொகு]

துரிதப்படுத்தப்பட்ட மஹவெலி ஒலீண்ட் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட காட்டு தாழ்வாதாரம் மட்டுமே.

சரணாலயங்கள்[தொகு]

மாநிலத்தின் வெளியே உரிமை பற்றி வாதாடுகின்ற வனவிலங்குகளின் தனிப்பட்ட நிலங்களின் பாதுகாப்பை சரணாலயங்கள் உறுதிப்படுத்துகின்றன. சரணாலயத்தினுள் வாழ்விடங்கள் பாதுகாத்தல் மற்றும் மனித நடவடிக்கைகள் அனுமதித்தல் ஆகிய இரெண்டும் ஒரே வேளையில் இடம்பெறுகின்றன. இவ் நிலைகளில் நுழைவதற்கு அனுமதி தேவையில்லை.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Biodiversity and Protected Areas - Sri Lanka". biodiversityhotspots.org. EarthTrends. Archived from the original on 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-04-21.
  2. (Sinhala) Senarathna, P. M. (2005). Sri Lankawe Wananthara (1st ). Sarasavi Publishers. பக். 13–17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-401-1. 
  3. "Western Ghats and Sri Lanka". biodiversityhotspots.org. Conservation International. பார்க்கப்பட்ட நாள் 2009-04-21.
  4. "Sri Lanka". mongabay.com. Mongabay. பார்க்கப்பட்ட நாள் 2009-04-21.
  5. 5.0 5.1 "Conservation action and protected areas". biodiversityhotspots.org. Conservation International. பார்க்கப்பட்ட நாள் 2009-04-21.
  6. 6.0 6.1 6.2 6.3 The National Atlas of Sri Lanka (2nd ). Department of Survey. 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-9059-04-1. 
  7. "Sri Lanka". unesco.org. யுனெசுகோ. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  8. "Forest management in Sri Lanka". mablanka.lk. Sri Lanka MAB programme. 2005. Archived from the original on February 10, 2006. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  9. "Protected Areas". dwlc.lk. Department of Wildlife Conservation (Sri Lanka). Archived from the original on 2005-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-04-21.

புற இணைப்புக்கள்[தொகு]