இறுதிநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறுதிநிலை என்று மொழிக்கு ஈற்றில் நிற்கும் எழுத்துகள் இவையிவை என நன்னூலின் எழுத்தியலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்களான ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ் , ழ், ள் ஆகிய பதினொரு எழுத்துக்களும் குற்றியலுகரம் ஒன்றும் என மொத்தம் இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்.[1]

எடுத்துக்காட்டுகள்

உயிர் எழுத்துகள் தனித்து வரும்போது அவை மொழிக்கு இறுதியாய் வரும்.

அ, ஆ, இ, ஈ

உயிர் எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழியாய் வருமிடங்களில் மொழிக்கு இறுதியில் வரும்.

ஆ – பசு
ஊ – இறைச்சி

உயிர் மெய்யோடு சேர்ந்து மொழிக்கு ஈற்றாய் உயிர் எழுத்துகள் வரும்.

பலா, தை, போ

மெய்யெழுத்துகளில் பதினொன்று மொழிக்கு இறுதியாய் வருமிடங்கள்:

உரிஞ், கண், பொருந், ஆக்கம், மீத்தேன், பாய், கதிர், தென்றல், தெவ், தமிழ், நாள்

குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வருவது:

எஃகு

சிறப்பு விதி[தொகு]

அ, இ, உ, எ, ஒ என்ற குறில் எழுத்துகள் அளபெடைகளில் சேர்ந்து வரும்பொழுது மொழிக்கு இறுதியில் நிற்கும். எ – மெய்யெழுத்தோடு சேர்ந்து ஈறாய் வராது. ஒ – நகரமெய் ஒன்றுடன் மட்டும் மொழிக்கு இறுதியில் வரும். ஔ- ககர மெய்யுடனும் வகர மெய்யுடனும் சேர்ந்து மொழிக்கு இறுதியில் வரும்.[2]

எடுத்துக்காட்டுகள்:

பலாஅ, தீஇ, பூஉ, சேஎ, கைஇ, கோஒ, கௌஉ
நொ – ஒகரம் நகரமெய்யுடன் இறுதியாதல் ( துன்பம் என்பது பொருள்)
கௌ, வௌ – ஔகாரம் மொழிக்கு இறுதியாதல் ( கௌ – பற்று, வௌ – கவர்தல் எனபன பொருள்)

மொழிக்கு இறுதியில் உயிர்மெய்[தொகு]

மெய்யெழுத்தின் ஒலி முன்னால் நிற்க உயிர் எழுத்தின் ஒலி பின்னால் தொடரும் என்பதால் உயிரெழுத்துக்கு மெய்யெழுத்து முதலும் உயிரெழுத்து ஈறுமாகும் என்கிறது நன்னூல் விதி.[3]

எடுத்துக்காட்டுகள்:

க = க் + அ , ச = ச் + அ முதலியனவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
    சாயு முகரநா லாறு மீறே - நன்னூல் 107
  2. குற்றுயிர் அளபின் ஈறாம் எகரம்
    மெய்யொடு ஏலாதுஒ நவ்வொ டாம்ஔ
    ககர வகரமோடு ஆகும் என்ப.- நன்னூல் 108
  3. நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறுதிநிலை&oldid=1880124" இலிருந்து மீள்விக்கப்பட்டது