இர. சா. சண்முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இர. சா. சண்முகம் (பிறப்பு: சூலை 19 1939) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இர. சா. இளமுருகு எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்ட இவர் அச்சகப் பணியாளர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1955 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. அத்துடன் மேடை நாடகம் எழுதி அரங்கேற்றியுள்ளார்.

நூல்கள்[தொகு]

  • "மலர் மங்கை" (தொகுப்பாசிரியர்).

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் 50-வது பிறந்த நாள் கட்டுரைப் போட்டியில் இரணடாம் பரிசு (1987);
  • முருகு சுப்பிரமணியன் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2002).

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இர._சா._சண்முகம்&oldid=3343247" இலிருந்து மீள்விக்கப்பட்டது