இருங்கோவேள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருங்கோவேள் பாரிமகளிரை மணந்துகொள்ள மறுத்தவன் [1]
வடபால் முனிவன் தடவினில் தோன்றி, செம்புக்கோட்டை துவரையை ஆண்டு, 49 வழிமுறை வந்த வேளிருள் வேள் என்று புகழப்படுகிறான்.[2]
சோழன் கரிகாலன் இருங்கோவேளை வீழ்த்தினான் [3]
இருங்கோ வேண்மான் தலையாலங்கானப் போரில் நெடுஞ்செழியனை எதிர்த்த எழுவரில் ஒருவன் [4]

இருக்குவேள் அரசர்கள்[தொகு]

இருக்குவேள் அரசர்கள் இருங்கோவேளின் வழிவந்தவர்கள் என்றும் இரு மரபினரும் வெவ்வேறு என்று மாற்றுக்கருத்துகள் ஆய்வாளர்களிடையே நிலவுகின்றன. இருக்குவேள் அரசரும் இருங்கோவேள் அரசரும் ஒருவரே என்று ஆரோக்கியசாமி தம்முடைய நூலில் கூறுகிறார்.[5] ஆனால் சங்க காலத்தில் இருந்த இருங்கோவேள் அரசருக்கும் பிற்காலத்தில் இருந்த இருக்குவேள் அரசருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அவர்கள் வேறு; இவர்கள் வேறு. பெயர்களில் காணப்படுகின்ற ஒற்றுமை பற்றி இருவரையும் ஒருவராக ஊகிப்பது கூடாது என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.[6]

சான்று மேற்கோள்[தொகு]

  1. கபிலர் புறம் 202
  2. கபிலர் புறம் 201
  3. பட்டினப்பாலை 282
  4. நக்கீரர் அகம் 36
  5. M. Arokiaswamy, The Early History of the Vellar Basin
  6. பண்டைத் தமிழக வரலாறு களப்பிரர் - துளு நாடு, பக்கம் 72
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருங்கோவேள்&oldid=2566225" இலிருந்து மீள்விக்கப்பட்டது