இருங்களூர்
இருங்களூர் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 621105 |
இருங்களூர் (Irungalur) என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1][2]
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான திருச்சிராப்பள்ளியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், மண்ணச்சநல்லூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 335 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இந்த நகரத்தில் 2,155 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள்தொகை 9,367 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 4,491 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 4,876 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 77.3% ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09%-ஐ விடக்குறைவு ஆகும்.[3]