இரியூபன் டேவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரியூபன் டேவிட் (Reuben David) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விலங்கியல் நிபுணர் ஆவார். 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று அகமதாபாத்தில் இருந்த ஒரு பெனே இசுரேல் யூத குடும்பத்தில் இரியூபன் டேவிட் பிறந்தார்.[1] இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காங்கரியா உயிரியல் பூங்காவை நிறுவினார்.[2][3] கால்நடை மருத்துவர் தொழிலை சுயமாகக் கற்றுக் கொண்ட இவர் 1951 ஆம் ஆண்டு அகமதாபாத் நகராட்சி ஆணையத்தினால் நகரத்தில் ஓர் உயிரியல் பூங்காவை உருவாக்க அழைக்கப்பட்டார்.[4]

1975 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இரியூபன் டேவிட்டுக்கு பத்ம சிறீ விருது வழங்கி கௌரவித்தது.[5] எழுத்தாளர் எசுதர் டேவிட் இவரது மகள் ஆவார்.

1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 24 ஆம் தேதியன்று இரியூபன் டேவிட் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Reuben David (1912 -1989) - Esther David" (in en-US). Esther David. http://estherdavid.com/reuben-david/. 
  2. "Ahmedabad zoo architect Reuben David remembered on 100th birth anniversary". indianexpress.com.
  3. Thomas, Amelia (11 January 2008). The Zoo on the Road to Nablus. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781586486587. https://books.google.com/books?id=jf7J5gObJ8IC&pg=PT70. 
  4. "Animal instinct". intoday.in.
  5. "AMC to mark 100th birth anniversary of zoologist Reuben David today". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2014-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியூபன்_டேவிட்&oldid=3341939" இலிருந்து மீள்விக்கப்பட்டது