இரா. மணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. மணியன் (பிறப்பு: சூன் 1, 1963) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம், நத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர். மணலி தமிழ்க் கல்லூரி, சர். தியாகராயர் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி, ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் அண்ணா பேரவை, வ.உ.சி. வரலாறு எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் பாரதியார் விருது பெற்றுள்ளார். இவருடைய "பெரியார் காவியம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._மணியன்&oldid=2765770" இலிருந்து மீள்விக்கப்பட்டது