இரா. குமரவேலன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இரா. குமரவேலன் (பிறப்பு: அக்டோபர் 19 1938) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் பிறந்த இவர் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்மொழி அறிவு பெற்றவர்.
எழுதிய நூல்கள்
[தொகு]பூங்குன்றன் கவிதைகள், தமிழ் நாடக ஆய்வு, கவிதை நாடகம் - ஒரு கண்ணோட்டம், பொன்னி, தமிழ் நாடக வளர்ச்சி, விடுதலை இயக்கமும் திராவிட இயக்கமும், மணலும் நுரையும் (கலீல் கிப்ரான் - தமிழாக்கம்) என பல நூல்களை எழுதியுள்ளார்.
பெற்ற விருதுகள்
[தொகு]கலைமாமணி விருது, நாடகச் செம்மல் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவர் எழுதிய “திருக்குறள் - வ. உ. சிதம்பரனார் உரை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
நாட்டுடமையாக்கம்
[தொகு]2024 நவம்பரில் இவரது படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடமை ஆக்கியது. இவரது மரபுரிமையாளர்களுக்கு பரிவுத் தொகையாக ரூ 10 இலட்சம் வழங்கியது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ DIN (2024-11-18). "9 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை: நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு". Dinamani. Retrieved 2024-11-19.
- ↑ "க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழவேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேர் நூல்கள் நாட்டுடைமை: வாரிசுகளுக்கு உரிமை தொகை". Hindu Tamil Thisai. 2024-11-19. Retrieved 2024-11-19.