இராயகிரி தெற்குமாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு தெற்குமாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:இராயகிரி, சிவகிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வாசுதேவநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
தாயார்:மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி, திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இராயகிரி தெற்குமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், இராயகிரி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோவில் ராயகிரி இந்து நாடார் உறவின் முறை கமிட்டிக்கு சொந்தமானது ஆகும். முக்கிய திருவிழாவாக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை திருவிழா ஆரம்பித்து வியாழக்கிழமை வரை சீறும் சிறப்புமாக நடைபெறுகிறது. இந்த திருவிழா நேரத்தில் கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். [2]

பூஜைகள்[தொகு]

இக்கோயிலில் காலை,மாலை இரண்டு பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)