இராமானுசன் கணித பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமானுசன் கணித பூங்கா (Ramanujan Math Park) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூரில் உள்ள குப்பத்தில் அமைந்துள்ள அகத்தியர் வளாக படைப்பாற்றல் ஆய்வகத்தில் உள்ள கணிதக் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்திய அருங்காட்சியகம் மற்றும் செயல்பாட்டு மையமாகும்.[1] இது அருகிலுள்ள சென்னை மாநிலத்தை (தமிழ்நாடு) சேர்ந்த இந்தியக் கணிதவியலாளர் சீனிவாச இராமானுசன் (1887-1920) நினைவாகப் பெயரிடப்பட்டது.[2] இது அகத்திய பன்னாட்டு அறக்கட்டளை மற்றும் கயனோம் என்ற இலாப நோக்கற்ற நிறுவனங்களின் கூட்டுத் திட்டமாகும்.[3]

அகத்தியர் கற்பித்தல் முறைகளுக்குப் பெயர் பெற்றது மற்றும் கணித பூங்கா இந்த பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறது. பூங்காவில் உட்புற மற்றும் வெளிப்புற கண்காட்சிகள் மற்றும் ஊடாடும் தொடுதிரை நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் கணித அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.[4] இந்த கணிதப் பூங்கா அனுபவத்தை இந்தியாவில் பிற இடங்களில் உள்ள அரசு நடத்தும் பள்ளிகளிலும் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது.[2]

வரலாறு[தொகு]

இராமானுசன் கணிதப் பூங்காவானது, சுஜாதா ராம்துரை மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ராம்துரை மற்றும் அருகிலுள்ள கோலாரில் உள்ள இந்தியக் கணிதத் தொடர்பாளர் வி. எஸ். எஸ். சாசுதிரியால் உருவாக்கப்பட்டு, ஓரளவு நிதியளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. இது 2017 திசம்பர் 22, இராமானுசன் பிறந்த நாளில் தேசிய கணித நாளில் துவக்கிவைக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Math park set up government school to innovate teaching techniques by Neel Kamal, The Times of India, October 24, 2017
  2. 2.0 2.1 DC inaugurates “Srinivasa Ramanuja Math Park” at Tapa by Amrit Pal Singh, Babushahi.com, October 24, 2017
  3. Ramanujan Maths Park gyanome.org: News/Announcements
  4. New math museums: Ramanujan Math Park New math museums
  5. "Ramanujan's birthday will be National Mathematics Day" by C. Jaishankar, The Hindu, December 27, 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமானுசன்_கணித_பூங்கா&oldid=3718430" இலிருந்து மீள்விக்கப்பட்டது