இராஜீவ் காந்தி தேசிய சமூக நல்லிணக்க விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜீவ் காந்தி தேசிய சமூக நல்லிணக்க விருது
மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகளுக்கான விருது
இதை வழங்குவோர்அகில இந்திய தேசிய காங்கிரசு தலைமைக் குழு
நாடுஇந்தியா Edit on Wikidata
வெகுமதி(கள்)Rs. 10 இலட்சம்
முதலில் வழங்கப்பட்டது1992

இராஜீவ் காந்தி தேசிய சமூக நல்லிணக்க விருது (Rajiv Gandhi National Communal Harmony Award) அல்லது இராஜீவ் காந்தி தேசிய சத்பவனா விருது என்பது மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் அமைதியை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் இந்திய விருது ஆகும். இது இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் நீடித்த பங்களிப்பை நினைவுகூரும் வகையில், இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் அகில இந்தியக் காங்கிரஸ் குழுவினால் 1992ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பத்து லட்சம் ரூபாய் விருது தொகையாக வழங்கப்படும் இந்த விருது இராஜீவ்காந்தியின் பிறந்த நாளான ஆகத்து 20 அன்று சத்பவ்னா திவாஸ் (நல்லிணக்க நாள்) கொண்டாடத்தின் போது வழங்கப்படுகிறது.[1] [2]

விருதாளர்கள்[தொகு]

அன்னை தெரசா, செனாய் மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான், வங்களாதேசத்தின் கிராமீன் வங்கி நிறுவனர் முகம்மது யூனுஸ், அசாம் முன்னாள் முதல்வர் இட்டேஸ்வர் சைகியா மற்றும் விடுதலைப் போராட்ட வீராங்கனை சுபத்ரா ஜோஷி, லதா மங்கேஷ்கர், சுனில் தத், ஜெகன்நாத் கவுல், திலீப் குமார் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். எழுத்தாளர் கபில வாத்ஸ்யாயன், வஹியுதீன் கான் (இஸ்லாமிய அறிஞர்), கிரண் சேத் விருது பெற்றவர்களாவர். சமூக ஆர்வலர்களான தீசுடா செதால்வத் மற்றும் ஹர்ஷ் மந்தேர், எஸ். என்.சுப்பாராவ், சுவாமி அக்னிவேஷ் மற்றும் மதரி மொய்தீன், முன்னாள் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன், நிர்மலா தேஷ்பாண்டே, ஹேம் தத்தா, என். ராதாகிருஷ்ணன் மற்றும் கௌதம் பாய் முதலானோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.[1][3]

ஆண்டு விருது பெற்றவர்கள் குறிப்பு
1995 ஜெகன் நாத் கவுல்[4] சமூக ஆர்வலர், SOS குழந்தைகள் கிராமத்தின் நிறுவனர்
1996 லதா மங்கேஷ்கர் பாடகர்
1998 சுனில் தத் நடிகர், அரசியல்வாதி, அமைதி ஆர்வலர்
2000 கபிலா வாத்ஸ்யாயன் அறிஞர்
2003 எஸ். என். சுப்பா ராவ் அமைதி ஆர்வலர்
2004 சுவாமி அக்னிவேஷ்[5] சமூக ஆர்வலர்
2006 நிர்மலா தேஷ்பாண்டே சமூக ஆர்வலர்
2007 ஹேம் தத்தா சமூக ஆர்வலர்
2008 என். இராதாகிருஷ்ணன் சமூக ஆர்வலர்
2009 கௌதம் பாய் சமூக ஆர்வலர்
2010 வஹிதுதூதீன் கான் இஸ்லாமிய அறிஞர், அமைதி ஆர்வலர்
2011 ஸ்பிக் மகே[1] இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது
2012 டி. ஆர். மேத்தா[1] பகவான் மஹாவீர் விக்லாங் சகாயதா சமிதி, ஜெய்ப்பூர் மூலம் வேலை செய்யுங்கள்
2013 அம்ஜத் அலி கான் இசைக்கலைஞர்
2014 முசாபர் அலி திரைப்பட தயாரிப்பாளர்
2016 சுபா முத்கல் பாடகர்
2017 முகமது அசாருதீன் முன்னாள் கிரிக்கெட் வீரர்
எம். கோபால கிருஷ்ணா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி
2018 கோபாலகிருஷ்ண காந்தி மத நல்லிணக்கம், அமைதி மற்றும் நல்லெண்ணம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "SPICMACAY For Rajiv Gandhi Sadbhavana Award". Outlook. 5 August 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Rajiv Gandhi remembered on his 65th birth anniversary". Deccan Herald (in ஆங்கிலம்). 20 August 2009.
  3. "Sadbhavana Award for Hem Dutta". 21 August 2007 இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071203131507/http://www.hindu.com/2007/08/21/stories/2007082162450300.htm. 
  4. "Muzaffar Ali to get Rajiv Gandhi National Sadbhavana Award". The Hindu (in Indian English). 1 August 2014.
  5. Swami Agnivesh - Biography பரணிடப்பட்டது 2008-12-04 at the வந்தவழி இயந்திரம் betterworldheroes.com..

வெளி இணைப்புகள்[தொகு]