இராஜாக்கவுண்டம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜாக்கவுண்டம்பாளையம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள சிற்றூர். திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு செல்லும் சாலையில் இரண்டு கல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. நகராட்சி எல்லைக்கு உட்பட்டது. பாளையம் என்னும் பொதுக்கூறினையும் இராஜாக்கவுண்டன் என்னும் தனிநபர் பெயராகிய சிறப்புக்கூறினையும் கொண்டு இவ்வூர்ப் பெயர் அமைந்துள்ளது. இராஜாக்கவுண்டன் என்பவர் பெயரால் இவ்வூர் அழைக்கப்படக் காரணம் யாதெனத் தெரியவில்லை. அவரைப் பற்றிய தெளிவான வரலாறும் கிடைக்கவில்லை. இவ்வூரில் 'நகராட்சித் தொடக்கப்பள்ளி' ஒன்று உள்ளது. கைத்தறி, விசைத்தறி ஆகியவை இவ்வூரில் முக்கியமான தொழில் ஆதலால் மிகப் பெரிய பாவடி ஒன்றும் இங்கு உள்ளது. மாரியம்மன் கோயில், முனியப்பன் கோயில் ஆகியவையும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜாக்கவுண்டம்பாளையம்&oldid=2033875" இலிருந்து மீள்விக்கப்பட்டது