இரத்தினகிரி தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரததினகிரி தாலுகா, (Ratnagiri taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில், அரபுக் கடலை ஒட்டி அமைந்த இரத்தினகிரி மாவட்டத்தின் 9 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் ரத்னகிரி நகரம் ஆகும். 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 1 நகராட்சி மன்றம், 4 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும் மற்றும் 196 வருவாய் கிராமங்களைக் கொண்டது.[2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 941.28 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 74,137 குடும்பங்களைக் கொண்ட இத்தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 3,19,449 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 1,55,575 மற்றும் 1,63,874 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 31099 - 9.74% ஆகும். சராசரி எழுத்தறிவு 78.59% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 4.34% மற்றும் 0.38% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 77.25%, இசுலாமியர்கள் 16.39%, பௌத்தர்கள் 5.77%, சமணர்கள் 0.27%, கிறித்துவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.10% ஆக உள்ளனர். 941.28 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தாலுகாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 339 பேர் வீதம் வாழ்கின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினகிரி_தாலுகா&oldid=3361051" இலிருந்து மீள்விக்கப்பட்டது