இரண்டாம் திருவந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் திருவந்தாதி (Irantam Tiruvantati) வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பூதத்தாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 பாசுரங்களை கொண்டது[1], இது பூதத்தாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரம் “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகிறது. இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பாத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[2]

சில பாசுரங்கள்[தொகு]

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.
பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதி 1 ஆம் பாசுரம்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இயற்பா பூதத்தாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய இரண்டாம் திருவந்தாதி". www.tamildigitallibrary.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
  2. "Dr B Jambulingam: நாலாயிர திவ்யப் பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்". Dr B Jambulingam. 2018-05-12. பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_திருவந்தாதி&oldid=3794839" இலிருந்து மீள்விக்கப்பட்டது