உள்ளடக்கத்துக்குச் செல்

இரணிக்குளம் சிறீ மகாதேவர் கோயில்

ஆள்கூறுகள்: 10°12′16″N 76°16′36″E / 10.204565°N 76.276775°E / 10.204565; 76.276775
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாதேவர் கோயில் 
மகாதேவர் கோயில்  is located in கேரளம்
மகாதேவர் கோயில் 
மகாதேவர் கோயில் 
இரணிக்குளம் மகாதேவர் கோயில், திருச்சூர் மாவட்டம், கேரளம்
ஆள்கூறுகள்:10°12′16″N 76°16′36″E / 10.204565°N 76.276775°E / 10.204565; 76.276775
பெயர்
வேறு பெயர்(கள்): 
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:திருச்சூர் 
அமைவிடம்: இரணிக்குளம், மாளா
கோயில் தகவல்
மூலவர்:மகாதேவர்
குளம்: 
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:இரண்டு 
கல்வெட்டுகள்: 

இரணிக்குளம் சிறீ மகாதேவர் கோயில் (Iranikulam Sree Mahadeva Temple) தென்னிந்தியாவின் கேரளாவின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான மாளாவில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் "தெக்கேடத்தப்பன்", "வடக்கேடத்தப்பன்" என இரண்டு முக்கிய தெய்வங்கள் உள்ளன. இரண்டு தெய்வங்களும் சிவபெருமான் ஆவார். கோவிலில் காணப்பட்ட உடைந்த சிலை காற்றப்பட்டு புதிய சிலை உருவாக்கப்பட்டது. தெற்கு சன்னதி பொதுவாக சிவபெருமானின் இரு நிலை கருவறை சன்னதியாக கருதப்படுகிறது. வடக்கு சன்னதியின் பிரதான தெய்வங்கள் சிவன், பார்வதி மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் ஒரே பலிபீடத்தில் கிழக்கு நோக்கிய கருவறையில் வசிக்கின்றனர்.[1] கேரளாவில் உள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றான இக்கோயில் பரசுராம முனிவரால் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[2][3] இக்கோயில் பண்டைய இரணிகுளம் கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ளது. கோயிலில் மகா சிவராத்திரி விழா மலையாள மாதமான கும்பத்தில் (பிப்ரவரி - மார்ச்) கொண்டாடப்படுகிறது.

பழமையான கிராமம்

[தொகு]

பழமையான கிராமமான இரணிகுளம் கிராமம் கேரளாவில் உள்ள 64 பிராமணக் கிராமங்களில் ஒன்றாகும். இரணிகுளம் அதன் பண்பாடுக்கு பெயர் பெற்றது. சேரர்களின் ஆட்சி பலவீனமடைந்தபோது, கோவில் நிர்வாகமும் பலவீனமடைந்தது. ஆனால் அவர்களுக்கிடையே சண்டைகள் ஏற்பட்டபோது, ஆட்சியில் இல்லாதவர்கள் இரு குழுக்களாக மாறி, தனி சன்னதியில் சிவபெருமானை மற்றொரு தெய்வமாக்கினர்.

பாரம்பரிய பிராமணர்களின் வசிப்பிடமான 'வட புஷ்பகம்' என்று அழைக்கப்படும் 'செம்பரி மடத்தில்' இருந்து பழைய மரப்பெட்டியில் 500 ஆண்டுகள் பழமையான கலைத் தொகுப்பு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பார்வதியின் பக்தர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்த கையெழுத்துப் பிரதி மலையாள சகாப்தம் 639 மிதுன மாதத்தில் கணக்கிடப்பட்டது (அதாவது, கிபி 1464).[4]

இதனையும் பார்க்கவும்

[தொகு]

கோவில் புகைப்படங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "108 Siva Temples".
  2. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". 3 March 2018. Archived from the original on 18 ஏப்ரல் 2019. Retrieved 22 ஜூலை 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information". templesinindiainfo.com.
  4. "HISTORY :: IRANIKULAM MAHADEVA KSHETHRAM :: IRANIKULAM TEMPLE :: SIVA TEMPLE, KERALA". www.iranikkulamtemple.com. Archived from the original on 2019-09-04. Retrieved 2022-07-22.