இயற்கை வேளாண்மையோடு ஒருங்கிணைந்த பண்ணையம்
இந்தப் பக்கம் சற்றுமுன்னர் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்குனர் விக்கிபீடியாவின் குறிப்பிடத்தக்கத் தன்மை குறித்துப் பழக்கப்பட்டவராவதுடன் இதனை நல்லெண்ணத்துடன் உருவாக்கியுள்ளார். விக்கிபீடியாவின் தரத்துக்கு இக்கட்டுரையை உயர்த்த நிறையத் தொகுப்புகள் தேவையாக இருக்கலாம். இதனை உடனே நீக்குவதற்காகக் குறிப்பிடுவதற்கு அவசரப்படவேண்டாம். ஆனால் சிறிது நேரத்தின் பின்னர் இக்கட்டுரையைக் கவனித்து, அதன் பின்னரோ அல்லது உடனடியாகவோ உருவாக்குனருடன் அவரது கட்டுரையின் வளர்ப்புத் திட்டத்தை உறுதி செய்துகொள்ளுங்கள். உருவாக்குனர் இக்கட்டுரை சம்பந்தமான அவரது பணியைக் கைவிட்டு இருந்தால் மற்றும் நீங்கள் அவருடன் தொடர்பு கொண்டதற்குப் பதில் ஏதேனும் அளிக்காவிடின் இக்கட்டுரையை நீக்குவதற்கு அல்லது தற்காலிகமாக நகர்த்தி மேம்படுத்துவதற்குப் பரிசீலனை செய்யலாம். இந்த கட்டுரை Vp1994 (பேச்சு | பங்களிப்பு) ஆல் 18 மாதங்கள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசோலா, பஞ்சகாவ்யா மற்றும் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து இயற்கை வேளாண்மையோடு ஒருங்கிணைந்த பண்ணையத்தை மேற்கொள்ளலாம். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் அசோலாவா உற்பத்தி செய்து பசுந்தீவனமாக மற்றம் இயற்கை உரமாக பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடை கழிவுகளைக் கொண்டு பஞ்சகாவ்யா தயாரித்து பயிர்களில் நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையம்[தொகு]
கால்நடகள், கோழிகள் மற்றும் மீன் ஆகியவற்றை ஒரே இடத்தில் பராமரித்து ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பினையும் கூடுதல் வருவாயினையும் பெற முடியும். உதாரணமாக ஒரே இடத்தில் மேல்தளத்தில் கோழிகளும் அவைகள் இடும் எச்சத்தை பயன்படுத்திக் கொள்ள கீழ்தளத்தில் பன்றிகளும் வளர்க்கப்பட்டு குளத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை வேளாண் பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண்மையுடன் கால்நடைகளை இணைக்கும்போது நிலம், நீர் மற்றம் தாவரங்கள் ஆகியவை முழு அளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஒருங்கிணைந்த பண்ணை முறையின் அவசியம்[தொகு]
வருடத்திற்கு ஒரு பயிர் மட்டும் சாகுபடி செய்யும் இடங்கள் நீர் பற்றாக்குறையுள்ள இடங்கள் மற்றும் மழை குறைவாக உள்ள இடங்களில் வேளாண்மையுடன் கால்நடைகளை வளர்க்கும் போது ஆண்டு முழுவதும் கூடுதல் வருனத்தையும் குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலை வாய்ப்பினையும் பெறலாம். காநல்நடைக் கழிவுகளை நிலத்திற்க உரமாக பயன்படுத்தி உரச் செலவை குறைப்பதுடன் உற்பத்தியையும் அதிகரிக்கலாம். இயற்கை உரத்தை பயன்படுத்துவதால் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. பயரில் இருந்து கிடைக்கும் பயர் பாகங்களை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தி கால்நடைகளின் தீவனச் செலவை குறைக்கலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பசுந்தீவன உற்பத்தி[தொகு]
பசந்தீவனப் பயிர்களை பயிர் செய்வதன் மூலம் மண்வளம், மண்ணின் நீர் தாங்கும் சக்தி அதிகரிப்பதோடு களைகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. பயறுவகை தீவனப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் மண்ணின் தழைச்சத்து வளம் அதிகரிக்கிறது.[1]