இம்ரானா வன்புணர்வு வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இம்ரானா வன்புணர்வு வழக்கு என்பது இந்தியாவில் 28 வயதான இம்ரானா தனது மாமனாரால் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்காகும்.[1][2][3]

நிகழ்வு[தொகு]

இந்தியாவின் முசாபர்நகர் மாவட்டம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சர்தாவால் கிராமத்தில் இசுலாமியப் பெண்ணான இம்ரானா, 6 ஜூன் 2005 அன்று தன் மாமனாரான 69 வயது அலி முகமதுவால் வன்புணர்வு செய்யப்பட்டார்.

காலநிலை[தொகு]

இம்ரானா வன்புணர்வு வழக்கின் காலநிலைகள்:

  • 6 ஜூன் 2005: அலி முகமது தனது மருமகளான இம்ரானாவை வன்புணர்வு செய்தார்.
  • 13 ஜூன் 2005: முகமது கைதுசெய்யப்பட்டார்.
  • 30 ஜூன் 2005: காவல்துறை முகமதுவின் மீது மருத்துவ ஆதாரங்களுடன் வழக்கினை பதிந்தது. நீதிபதியின் முன்பு இம்ரானாவின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
  • 5 டிசம்பர் 2005: முகமதுவின் பிணை ஆணை கோரி வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.
  • 19 அக்டோபர் 2006: 10 ஆண்டு சிறைதண்டனையை முகமதுவிற்கு நீதிமன்றம் வழங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Let's be fair to Imrana". Expressindia.com இம் மூலத்தில் இருந்து 14 March 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070314211025/http://www.expressindia.com/fullstory.php?newsid=50422. 
  2. "Tahir Mahmood, The legal fiction behind the controversy". Tehelka.com. Archived from the original on 8 February 2012. பார்க்கப்பட்ட நாள் 29 September 2007.
  3. "Imrana Rape Case Triggers a Storm in India". Arab News (in ஆங்கிலம்). 2005-07-02. பார்க்கப்பட்ட நாள் 2021-03-09.