இமாங்சு மோகன் சவுத்ரி
இமாங்சு மோகன் சவுத்ரி Himangshu Mohan Choudhury | |
---|---|
பிறப்பு | கேங்டாக், சிக்கிம், இந்தியா |
பணி | ஆட்சிப் பணியாளர் |
விருதுகள் | பத்மசிறீ வங்கதேசத்தின் சிறந்த நண்பர் |
இமாங்சு மோகன் சவுத்ரி (Himangshu Mohan Choudhury) ஓர் இந்திய அரசு ஆட்சிப்பணியாளராவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காள தேச விடுதலைப் போரின்போது அகதிகள் மற்றும் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். [1][2] இந்திய எல்லை மாநிலமான திரிபுராவில் உள்ள சோனாமுராவில் துணைக் கோட்ட அதிகாரியாக பணிபுரியும் போது, இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கும் பணியை சவுத்ரி மேற்பார்வையிட்டதாக கூறப்படுகிறது. [2] இவரது சேவைக்காக இந்திய அரசாங்கம் இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது. [3] வங்க தேச அரசாங்கமும் வங்காள தேசத்தின் சிறந்த நண்பர் என்ற கௌரவத்தை 2013 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது. [1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Ex-IAS officer gets Bangla honour". Hindustan Times. 16 March 2013. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 2.2 "Bangladesh honour for ex-IAS officer". The Hindu. 24 March 2013. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)