இமாங்சு மோகன் சவுத்ரி
தோற்றம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இமாங்சு மோகன் சவுத்ரி Himangshu Mohan Choudhury | |
|---|---|
| பிறப்பு | கேங்டாக், சிக்கிம், இந்தியா |
| பணி | ஆட்சிப் பணியாளர் |
| விருதுகள் | பத்மசிறீ வங்கதேசத்தின் சிறந்த நண்பர் |
இமாங்சு மோகன் சவுத்ரி (Himangshu Mohan Choudhury) ஓர் இந்திய அரசு ஆட்சிப்பணியாளராவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காள தேச விடுதலைப் போரின்போது அகதிகள் மற்றும் இராணுவத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.[1][2] இந்திய எல்லை மாநிலமான திரிபுராவில் உள்ள சோனாமுராவில் துணைக் கோட்ட அதிகாரியாக பணிபுரியும் போது, இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்கும் பணியை சவுத்ரி மேற்பார்வையிட்டதாக கூறப்படுகிறது.[2] இவரது சேவைக்காக இந்திய அரசாங்கம் இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கிச் சிறப்பித்தது.[3] வங்க தேச அரசாங்கமும் வங்காள தேசத்தின் சிறந்த நண்பர் என்ற கௌரவத்தை 2013 ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்பித்தது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Ex-IAS officer gets Bangla honour". Hindustan Times. 16 March 2013. https://www.hindustantimes.com/delhi/ex-ias-officer-gets-bangla-honour/story-gDHie0Denbeq95ABYd9blK.html.
- 1 2 3 "Bangladesh honour for ex-IAS officer". The Hindu. 24 March 2013. Retrieved 3 June 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 11 November 2014.