இந்திய வனப் பணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய வனப் பணி (அ) இ.வ.ப, (ஐ.எப்.எஸ்) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்தியக் காவல் பணி (அ) இ. கா. ப மற்றும் இந்திய ஆட்சிப் பணி (அ) இ. ஆ. ப ஆகும். இ வ.ப பயிற்சி பெற்ற அலுவலர்கள் இந்திய மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசுகளின் ஆளுமைக்குட்பட்ட வனப்பகுதிகளை பாதுகாக்கவும், வனவுயிரனங்களை பராமரிக்கும் பொறுப்பினை மேற்கொள்வதற்கு உறுதுணை புரிகின்றனர். அரசின் வனஅமைச்சக செயலாட்சியர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர்.


வரலாறு[தொகு]

இந்திய வனப் பணி 1966 [1] ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டது. பிரித்தானிய காலணி ஆளுமையின் கீழ் இந்தியா இருந்த காலகட்டத்தில் இது பேர்ரசின் வனத் துறை என்று 1864[1] பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டிருந்து. அப்பொழுதய வனத்துறைத் தலைவராக (இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் பாரஸ்ட்) முனைவர் டியட்ரிச் பிரான்டீஸ் என்ற ஜெர்மானிய வன அலுவலர் தலைமையேற்றிருந்தார்.

1867[1] இல் பேரரசின் வனப்பணி என்ற அமைப்பை பேரரசின் வனத் துறையின்[1] கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரித்தானிய காலணி அரசாங்கமும் வனவளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் நோக்கத்தில் வனத்துறை செயலாட்சியர் மற்றும் வல்லுநர்களை உருவாக்கி வனவளர்ச்சியில் முன்னோடிகளாக இன்று நாம் பங்கெடுக்கும் அளவில் செயல்பட்டது என்பது மிகையாகாது.

அன்றைய காலகட்டத்தில் இதன் அலுவலர்கள் 1867[1] முதல் 1885 வரையில் ஜெர்மன் மற்றும் பிரான்சுகளில் பயிற்சி பெற்றனர். 1905 இல் கூப்பர் மலை, இலண்டன் மற்றும் குறிப்பிடத்தக்க கல்லூரிகளில் இதற்கான பயிற்சிகளைப் பெற்றனர்.

1905 முதல் 1926 வரையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இதற்கானப் பயிற்சியை வழங்கியது.

1927 முதல் 1932 வரையில் வன அலுவலர்கள் பேரரசின் வன ஆராய்ச்சி மையம் டேரடூனில் துவக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சியளித்த்து.இது கட்டமைக்கப்பட்டது 1906. அதன்பின் இந்திய வனக் கல்லூரி 1938 இல் டேராடூனில் துவக்கப்பட்டு வன அலுவலர்களுக்கு மிக சிறப்பானதொரு பயிற்சி அளிக்கப்பெற்று தேர்வு செய்யப்பட்டனர்.

தற்பொழுதய வனப் பணி இந்திய விடுதலைக்குப்பிறகு 1966 இல் இந்திய பணியியல் சட்டம் 1951[1] , இன் படி கட்டமைக்கப்பட்டு இந்திய வனப் பணி என்ற அமைப்பாக செயலாற்றி வருகின்றது.

இந்தியாவின் வனப் பரப்பளவு 6,35,400 ச.கி.மீ[1] வரை பரந்துள்ளது ஆகும். நாட்டின் 22.27 சதவீதம் வனப்பகுதியாகும். இதைப் பாதுகாக்கும் கடமை அரசுக்குள்ளதால் 1894 ல் உருவாக்கப்பட்ட வனப்பாதுக்காப்புக் கொள்கை 1952, மீண்டும் 1988 இல் திருத்தியமைக்கப்பட்டது.

தேர்வு மற்றும் பயிற்சிகள்[தொகு]

தேர்வு நடைமுறை[தொகு]

இந்திய வனப் பணித் தேர்வுகளின் மதிப்பீடு
தேர்வுகள் மதிப்பெண்
பொது ஆங்கிலம் தாள் 300
பொது அறிவுத் தாள் 300
மொத்த மதிப்பெண் 600
விருப்பத் தேர்வு-1 (14 பாடப்பிரிவுகளுள்) 200 ம.பெ
விருப்பத் தேர்வு-2(14 பாடப்பிரிவுகளுள்) 200 ம.பெ
விருப்பத் தேர்வு மொத்த மதிப்பெண் 400
மேற்கண்டத் தேர்வுகளில் தேர்வு பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர்
நேர்காணல் 300

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வனப்_பணி&oldid=3500390" இலிருந்து மீள்விக்கப்பட்டது