இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006[1] (ஆங்கிலம்-Banking Ombudsman Scheme, 2006) இந்தியாவின் வங்கிகளின் (மக்கள்) சேவை சார்ந்த புகார்கள் குறித்து உறுதியான தீர்வெடுப்பதற்கும் அவற்றைக் களைவதற்கும் ஏற்படுத்தபெற்ற திட்டமாகும். இத்திட்டம் 1995ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்ன்ர் 2002ல் திருத்தப்பட்டது.

துவக்கம்[தொகு]

இத்திட்டம் ஜனவரி 1, 2006[1] முதல் இந்தியாவில் அமலுக்கு வந்த்து. இது ஏற்கனவே இருந்த வங்கிகள் குறை தீர்ப்பாளர் திட்டம், 2002 இன் மாற்று வடிவமாகும்.[1] இச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பெற்ற ஆணையம் வங்கிகள் குறைதீர்ப்பாணையம் என் அழைக்கப்படுகின்றது. இவ்வாணையத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் நியமிக்கபெற்ற தீர்ப்பாளரே,[1] இந்தியாவில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர் சேவைக் குறித்த புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்பவர்.

மொத்த தீர்வாணையங்கள்[தொகு]

இத்திட்டத்தின்படி அமைக்கபெற்ற தீர்வாணையங்கள் இன்றைய நாள் வரை 15 தீர்வாணையங்கள்[1] இந்தியா முழுமையிலும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் இயங்குகின்றன.

அதிகாரங்கள்[தொகு]

இவற்றின் அதிகாரங்கள் பகுதியளவு நீதிமன்றத்திற்கு இணையானது. வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்க்கும் ஆணைகள் பிறப்பிக்கவும் நடுநிலையாளர்கள் மூலம் புகார்களைத் தீர்க்கவும் இதற்கு சட்டரீதியான அதிகாரமுண்டு. இத்திட்டத்தின் கீழ்வரும் வங்கிகளாக அனைத்து பட்டியலிடப்பட்ட தொடக்கநிலை கூட்டுறவு[1] வங்கிகளும் அடங்கும்.

வேறுபாடு[தொகு]

இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாளர் திட்டம், 2002 இலிருந்து பலவிடயங்கள் வேறுபடுகின்றன[1] . புதிய 2006 திட்டத்தின் கீழ் இதன் பரப்பெல்லைகள் விரிவுபடுத்தப்பட்டு புகார்கள் கணினிவழியாகப் பெறப்பட்டு தீர்வுகாணப்படுகின்றன. தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் மேல்மூறையீட்டு ஏற்றாய்வு அலுவலர் (அதிகாரி)[1] நியமிக்கப்பட்டு அவரின் வழிகாட்டுதலின்படி மேல்மூறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எத்தகைய குறைகள் குறித்து புகார்மனு தரலாம்[தொகு]

வங்கிச்சேவை குறைபாடு குறித்த பின்வரும் புகார்களை வங்கிகள் குறைதீர்ப்பாணையம் ஏற்று கவனிக்கலாம்.

  1. வரைவோலை, கேட்போலை, உறுதிச்சீட்டுகள் போன்றவை மீதான பணம் வசூலிக்கப்பட்ட தொகை அளிக்கப்படாவிட்டாலோ, அல்லது அளிப்பதில் மிதமிஞ்சிய காலதாமதம்.
  2. போதிய காரணமின்றி, நாணயங்கள் வழங்கப்படும்போது, வாங்க மறுப்பதும் அந்த சேவைக்குத் தரகுத் தொகை வசூலிப்பதும்.
  3. உள்வரும் பணவரவுத்தொகைகளை செலுத்தாமலிருப்பதும் செலுத்துவதில் தாமதம் செய்வதும்.
  4. பணவழங்காணைகள், கேட்போலைகள், வங்கி வரைவோலைகள் வழங்காமலிருத்தல், வழங்குவதில் தாமதம் செய்தல்.
  5. குறிக்கப்பட்ட வங்கிவேலை நேரத்தை கடைப் பிடிக்காமலிருத்தல்.
  6. கடன் சான்றிதழ், மற்றும் கடன் உத்தரவும் சார்ந்த கடமைப்பொறுப்பை மதித்து நடப்பதிலிருந்து தவறுதல்.
  7. கடன் மற்றும் முன்பணம் வழங்கும் வசதி தவிர, எழுத்தளவில் வங்கியாலோ அல்லது அதன் நேரடி விற்பனை முகவர்கள் மூலமாகவோ உறுதியளிக்கப்பட்ட வங்கி வசதியை அளிக்காமலிருத்தல் அல்லது அளிப்பதில் தாமதம்.
  8. வங்கியில் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு, நடப்புக்கணக்கு அல்லது வேறெந்தவகைக் கணக்கிலும், வாடிக்கையாளருக்குரிய வரவு வைக்கப்படவேண்டிய தொகையை வரவு வைக்காமலிதுத்தல், தாமதித்தல் சேமிப்பைத்திருப்பியளிக்காமலிருத்தல், வட்டி விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டளைகளை அனுசரிக்காமலிருத்தல், வங்கியின் இந்திய நடவடிக்கைகள் சார்நத புகார்களாயின் ஏற்றுமதியாளருக்குரிய ஏற்றுமதித் தொகையைப்பெற்று அளிப்பதில் தாமதம். ஏற்றுமதி உறுதிச்சீட்டுகள் கையாளுதல் மற்றும் உறுதிச்சீட்டுகள் வசூல் இவற்றில் தாமதம்.
  9. மறுப்பதற்கான எந்த உரிய காரணம் இல்லாமல் சேமிப்புக்கணக்கினைத் துவக்க மறுத்தல்.
  10. உரிய முன் அறிவிப்பு ஏதும் தராமல் கட்டணங்கள் வசூலித்தல்.
  11. தானியங்கி பணம் வழங்கும்/பற்று அட்டை நடைமுறைகள் மற்றும் கடன் அட்டை நடைமுறைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை அனுசரிக்காத வங்கிகள் மற்றும் அதன துணை நிறுவனங்களின் மீதான புகார்கள்.
  12. பணியாளரல்லாத ஒருநபரின் ஓய்வூதிக்கணக்கிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படாவிட்டால் அல்லது அதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணம் வங்கியின் செயல்பாட்டில் நிகழந்த குறையென்று சொல்லமுடிந்தால் அத்தகைய புகார்கள்.
  13. ரிசர்வ் வங்கி அல்லது அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வரிகளுக்கான் பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது அதை தாமதப்படுத்துதல்.
  14. இந்திய அரசுப்பத்திரங்களை வெளியிடமறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றை பராமரிக்க மறுத்தல் அல்லது தாமதித்தல், அவற்றிற்குரிய பணத்தைத் திருப்பித்தர மறுத்தல் அல்லது தாமதித்தல்.
  15. வாடிக்கையாளருக்கு உரிய அறிவிப்பின்றி வலிந்து சேமிப்புக்கணக்கினைக் காரணமின்றி முடித்துக்கொள்ளுதல்.
  16. வங்கிக் கணக்குகளை முடிக்க மறுத்தல் அல்லது முடித்தலில் தாமதம்.
  17. நியாயமான பழக்கங்களுக்கான வங்கியின் நெறி முறைகளிலிருந்து பிறழுதல்.
  18. வங்கிச்சேவை மற்றும் இதர சேவைகளுக்கான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களிலிருந்து பிறழும் எந்தவிதமான விஷயத்திற்காகவும் புகார் செய்யலாம்.


வெளிப்புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]