உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் நீதித்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் நீதித்துறை
நீதி இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கிறது
சேவை கண்ணோட்டம்
முன்னர் அறியப்பட்டதுகூட்டாட்சி நீதித்துறை
நிறுவப்பட்ட ஆண்டுசென்னை மேயர் நீதிமன்றம் (1726)
நாடு இந்தியா
பயிற்சி நிறுவனம்தேசிய நீதித்துறை அகாதமி, இந்தியா, (போபால்)[1]
State Judicial Academy
கட்டுப்பாட்டு அமைப்புகள்இந்திய உச்ச நீதிமன்றம் (இந்திய அளவில்)
உயர் நீதிமன்றம் (மாநில அளவில்)
சட்ட ஆளுமைநீதித்துறை
கடமைகள்நீதி நிர்வாகம்
பொது நல வழக்குகள்
இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலர்
இந்தியாவில் நீதிமன்றங்களின் படிநிலை1. இந்திய உச்ச நீதிமன்றம்
2. மாநில உயர் நீதிமன்றங்கள்
3. மாவட்ட நீதிமன்றங்கள்
4.நிர்வாக/வருவாய் நீதிமன்றஙள்
பதவிப் பெயர்கள்நீதியரசர்
நீதிபதி
நீதித் துறை நடுவர் - நீதித்துறை & நிர்வாகத் துறை நடுவர்கள்
நீதிபதிகளின் எண்ணிக்கை23,790 (உச்ச நீதிமன்றத்தில் 33, உயர் நீதிமன்றங்களில் 1079, சார்நிலை நீதிமன்றங்களில் 22677)
தேர்வு / நியமனம்உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரைப்படி[2], இந்தியக் குடியரசுத் தலைவரால் உச்ச நீதிமன்றம் & உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்
மாநில சட்டத்துறையின் ஆலோசனைபடி மாநில ஆளுநர்களால் சார்-நிலை நீதிபதிகளை நியமிக்கப்படுகிறார்கள். (பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நீதித்துறை சார்நிலை சேவைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை)
ஊதியம்₹77,840 - ₹2,80,000
சங்கம்அகில இந்திய நீதிபதிகள் சங்கம்[3]
நீதித்துறையின் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதிநீதியரசர் சஞ்சீவ் கண்ணா

இந்தியாவில் நீதித்துறை', என்பது இந்தியாவில் அனைத்து வகையான சட்டங்களை விளக்கி செயல்படுத்தும் நீதிமன்றங்களின் அமைப்பாகும்.இது குடிமையியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் மற்றும் மதம் சார்ந்த தனிப்பட்ட சட்டங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பொருந்தக்கூடிய பொது சட்டங்கள் அடிப்படையில் கலப்பு சட்ட அமைப்பை கையாள்கிறது.

இந்திய நீதித்துறை மூன்று நிலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவைகள்: இந்திய உச்ச நீதிமன்றம், உயர் நீதி மன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் ஆகும்.

இந்தியாவில் குடிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் மதம் சார்ந்த தனிப்பட்ட சட்டங்கள் தொடர்பான வழக்குகளுக்கு இறுதி தீர்ப்பு வழங்குவது இந்திய உச்ச நீதிமன்றம் ஆகும். மேலும் உச்ச நீதிமன்றம் இறுதி மேல்முறையீட்டு மன்றமாகவும் செயல்படுகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று மூத்த நீதிபதிகள் கொண்ட குழுவின் (கொலிஜியத்தின்) பரிந்துரைப்படி, இந்தியக் குடியரசுத் தலைவரால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் & உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

மாநிலங்களின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நீதித்துறை சார்-நிலை சேவைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை[4], மாநில ஆளுநர்கள் சார்-நிலை நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

உயர் நீதிமன்றங்கள் இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்கள் & ஒன்றியப் பகுதிகளுக்கு மாநில தலைமை நீதிபதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படும் உயர் நீதித்துறை அமைப்புகளாகும். உயர் நீதிமன்றங்கள் அந்தந்த அதிகார வரம்புகளில் உள்ள மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்களை நிர்வகிக்கிறது.

நிர்வாகம் மற்றும் வருவாய் நீதிமன்றங்கள் அந்தந்த மாநில அரசுகளின் மாவட்ட நீதிபதிகள் அல்லது பிற நிர்வாக நீதிபதிகள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.. நிர்வாக நீதிமன்றங்கள் நீதித்துறையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், பல்வேறு விதிகள் மற்றும் தீர்ப்புகளின்படி, உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதிகள் அவற்றின் செயல்பாட்டை ஆய்வு செய்ய அல்லது இயக்க அதிகாரம் அளிக்கிறது..

இந்திய அளவில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், சட்டங்களை உருவாக்குவதற்கும், நீதித்துறை தொடர்பான பிரச்சினைகளை நாடாளுமன்றத்துடன் இணைந்து தீர்ப்பதற்கும், புதிதாக நியமிக்கப்பட இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் & உயர் நீதிமன்ற நீதிபதிகள் பெயர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும்.

அரசியலமைப்பும் நீதித்துறையும்

[தொகு]

இந்திய அரசியலமைப்பு நீதித்துறையை சட்டத்தின் பாதுகாவலராக செயல்பட அதிகாரம் அளிக்கிறது. நீதித்துறையின் பங்கு, அதிகாரம், செயல்பாடு மற்றும் அதிகாரி நியமனங்கள் குறித்து இந்திய அரசியலமைப்பில் பல விதிகள் உள்ளது. முக்கிய விதிகள்:

  • பகுதி V - அத்தியாயம் IV - ஒன்றிய நீதித்துறை அதாவது இந்திய உச்ச நீதிமன்றம் - நீதிபதிகள் நியமனம், நீதிபதிகளை நீக்குதல், பங்கு மற்றும் பணிகளை விளக்குகிறது.
  • பகுதி VI - அத்தியாயம் V - உயர் நீதிமன்ற - நீதிபதிகளை நியமித்தல் மற்றும் நீக்குதல், பங்கு மற்றும் பணிகள்
  • பகுதி tVI - அத்தியாயம் VI- சார்-நிலை நீதிமன்றங்கள் - நீதிபதிகளை நியமித்தம் & நீக்குதல், பங்கு & பணிகள்
  • விதி 50 - நீதித்துறையின் சுதந்திரம் - நீதித்துறையை நிர்வாகக் துறையிலிருந்து பிரிக்கிறது

சட்ட விஷயங்களில் நீதித்துறை நடுவராக செயல்படுகிறது. அரசியலமைப்பில் உள்ள சிக்கல்களை: நீதித்துறை மறுஆய்வு செய்யும். நாடளுமன்றம் மன்றம் அல்லது மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறுவதை கண்காணிக்கும் தளமாகச் செயல்படுகிறது.[5] இந்திய அரசியலமைப்பிலுள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் நீதித்துறை பாதுகாவலராகச் செயல்படுகிறது. மேலும் அரசின் எந்தவொரு ஒரு துறை அல்லது நிறுவனம் அடிப்படை உரிமைகளை மீறாமல் பாதுகாக்கிறது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே அல்லது மாநில அரசுகளுக்கிடையே ஏற்படும் அதிகார முரண்பாடுகளை நீதித்துறை தீர்த்து வைக்கிறது..

அரசாங்கம் அல்லது நிறுவனம் அல்லது குடிமக்களின் அழுத்தங்களால் என்றும் நீதித்துறை பாதிக்கப்படாது. நீதித்துறையின் சுதந்திரம் அரசியலமைப்பின் அடிப்படை மற்றும் பிரிக்க முடியாத அம்சமாகும்.[6][7][8]

எந்த அமைச்சரும் ஒரு நீதிபதியை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க இயலாது[9][10] குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலிருந்து நீதிபதிகளை நியமிக்கிறார். உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்ட பிறகு, அவர்களை பதவியில் இருந்து நீக்க முடியாது. நீதிபதிகளின் தவறான நடத்தை அல்லது இயலாமை காரணமாக, நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றால் தான் நீதிபதிகளை பதவியிலிருந்து நீக்க இயலும்.[11][12]

நியமனம்

[தொகு]

இந்திய அரசியலமைப்பின் பகுதிகள் V மற்றும் VI கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் உள்ள குழுவின் (கொலிஜியம்) ஒப்புதல் பேரில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்

வரலாறு

[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் முதன்முதலாக மெட்ராஸ் மேயர் நீதிமன்றம் 1726-இல் நிறுவப்பட்டது. முதன்முதலாக 26 சூன் 1862 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

நீதித்துறையில் படிநிலைகள்

[தொகு]

நீதிமன்றங்களின் கட்டமைப்பு

[தொகு]

Courts of India infographic

உச்ச நீதிமன்றம்

[தொகு]
முன்புறத்தில் சிற்பத்துடன் கூடிய உச்ச நீதிமன்ற கட்டிடம்

புது தில்லியில் உள்ள இந்திய உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் உள்ளிட்ட 33 நீதியரசர்க்ள் உள்ளனர். இதுவே இந்தியாவின் அதியுயர் நீதிமன்றம் ஆகும். இந்திய அரசியலமைப்பு பகுதி V மற்றும் அத்தியாயம் IV கீழ் உச்ச நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இது குடிமையியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் மற்றும் மதம் சார்ந்த தனிப்பட்ட சட்டங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பொருந்தக்கூடிய பொது சட்டங்களின் கீழ் தீர்ப்புகள் வழங்குகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

உயர் நீதிமன்றங்கள்

[தொகு]

இந்திய மாநிலங்கள் அளவில் 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளது.[13]இந்திய அரசியலமைப்பு பகுதி VI, அத்தியாயம் V கீழ் உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.. இது குடிமையியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் மற்றும் மதம் சார்ந்த தனிப்பட்ட சட்டங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பொருந்தக்கூடிய பொது சட்டங்களின் கீழ் தீர்ப்புகள் வழங்குகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநரின் அலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை நியமிக்கிறார்.

மாவட்ட நீதிமன்றம் மற்றும் சார்-நிலை நீதிமன்றங்கள்

[தொகு]

மாநில அரசுகளே மாவட்டங்கள் வாரியாக மாவட்ட நீதிமன்றங்களை அமைக்கிறது. உயர் நீதிமன்றங்களின் மேற்பார்வையில் மாவட்ட நீதிமன்றங்கள் செயல்படுகிறது. மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மீதான மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரணை செய்கிறது. [14]

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் மாநில ஆளுநர், மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட கூடுதல் நீதிபதிகளை நியமிக்கப்படுகிறார்கள்.[15] சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா மாநகரங்களில் மட்டுமே மாவட்ட நீதிபதிகளை மெட்ரோபாலிட்டன் அமர்வு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது..[16]

குற்றவியல் & குடிமையியல் வழக்குகளில், சார்-நிலை நீதிமன்றங்களான இரண்டாம் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் மீதான மேல்முறையீடு வழக்குகளை மாவட்ட நீதிமன்றங்கள் விசாரணை செய்யும். குடும்ப நீதிமன்றங்கள் மற்றும் மகளிர் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் மீதான மேல் முறையீட்டு வழக்குகளை மாவட்ட முதன்மை நீதிபதி விசாரிப்பார்.

தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் சார்-நிலை நீதிபதிகளை, உயர் நீதிமன்ற ஆலோசனையின் பேரில் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நிர்வாகத் துறை நீதிமன்றம்

[தொகு]

பொது அமைதி பாதிக்கும் வகையில் கலவரத்தில் ஈடுபவர்கள் மீது, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் துப்பாக்கி சூடு போன்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய்த் துறையின் கோட்டாச்சியர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு நிர்வாக நீதிமன்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Hierarchy of Executive Judiciary of India
இந்தியாவில் நிர்வாக நீதித்துறை

வருவாய்த் துறை நீதிமன்றங்கள்

[தொகு]

வருவாய்த் துறை நீதிமன்றங்கள் நஞ்செய் மற்றும் புன்செய், தரிசு நிலம், புறம்போக்கு நிலங்கள் தொடர்பாக ஏற்படும் பிணக்குகளை விசாரணை செய்து தீர்ப்பளிக்கிறது.:


Revenue courts of India
இந்தியாவில் வருவாய்த் துறை நீதிமன்றங்கள்

நீதித்துறை அகாதமி

[தொகு]

தேசிய அளவில் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கும் நீதி பரிபாலனத்தில் சிறப்புப் பயிற்சி வழங்குவதற்கு போபாலில் தேசிய நீதித்துறை அகாதமி நிறுவப்பட்டுள்ளது.. மாநில அளவில் சார்-நிலை நீதிபதிகளுக்கு அந்தந்த மாநில அளவில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Judicial Academy". 24 March 2020. Archived from the original on 5 December 2003. Retrieved 24 March 2020.
  2. Collegium Resolutions
  3. "All India Judges". allindiajudges.org.
  4. direct recruitment to the post of Civil Judge
  5. Bhattacharyya, Bishwajit. "Supreme Court Shows Govt Its LoC". the day after (1–15 Nov 2015) இம் மூலத்தில் இருந்து 5 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160505192102/http://www.dayafterindia.com/magz_detail_news.php?id=4202. 
  6. "1. New Delhi (26 September 2001)". A Consultation Paper on the Financial Autonomy of the Indian Judiciary (Report). National Commission to Review the Working of the Constitution. Archived from the original on 4 March 2016. Retrieved 5 November 2015.
  7. Chakrabarty, Bidyut (2008). Indian Politics and Society Since Independence: Events, Processes and Ideology (First ed.). Oxon(UK), New York (US): Routledge. p. 103. ISBN 978-0-415-40867-7. Retrieved 5 November 2015.
  8. Sorabjee, Soli J. (1 November 2015). "A step in the Wrong Direction". The Week. http://www.theweek.in/theweek/current/invalidating-thenjac-act.html. 
  9. Venu, M.K. (5 July 2013). "Government may drop gag clause, wants judges to show restraint". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/government-may-drop-gag-clause-wants-judges-to-show-restraint/article4883161.ece. 
  10. Hegde, Sanjay (19 October 2015). "Judging the Judge-Maker". The Hindu. http://www.thehindu.com/opinion/op-ed/njac-judging-the-judgemaker/article7777564.ece. 
  11. Bhushan, Prashant. "A historic non-impeachment" (PDF). Frontline (4 June 1993). Archived from the original (PDF) on 9 December 2014. Retrieved 5 December 2014.
  12. "Motion for removal of Mr. Justice Soumitra Sen, Judge, Calcutta High Court" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi, October 2011. pp. 414–419. Retrieved 4 December 2014.
  13. "High Courts | Official Website of e-Committee, Supreme Court of India | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-10-29.
  14. Check Court Judgements (JUDIS) பரணிடப்பட்டது 5 பெப்ரவரி 2011 at the வந்தவழி இயந்திரம் Government of India website.
  15. "District Courts of India – official website". Archived from the original on 22 January 2013. Retrieved 16 March 2012.
  16. "CrPc Section 8 – Metropolitan areas". Indian Kanoon. Retrieved 16 March 2012.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_நீதித்துறை&oldid=4205299" இலிருந்து மீள்விக்கப்பட்டது